உலகம்

ஐக்கிய அமீரகத்தில் கரோனா தொற்று 20,386 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

ஐக்கிய அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 725 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ஐக்கிய அமீரகம் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,386 ஆக அதிகரித்துள்ளது. 206 பேர் பலியாகியுள்ளனர். 6,523 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதுமான கரோனா பரிசோதனைகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று ஐக்கிய அரசு அமீரகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கூட்டாட்சி சட்டத்தின்படி விடுமுறையை அந்நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று அந்நாட்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசிய நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 44,29,969 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,98,180 பேர் பலியாகியுள்ளனர். 16,59,873 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT