உலகம்

ஸ்பெயினை சீரழிக்கும் கரோனா வைரஸ்: ஒரே நாளில் 832 பேர் மரணம், பலி எண்ணிக்கை 5,690 ஆக அதிகரிப்பு

ஏபி

கரோனா வைரஸ் பயங்கரமான விளைவுகளை ஸ்பெயினில் ஏற்படுத்தியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 832 பேர் மரணமடைந்துள்ளனர்.

மொத்தமாக இறந்தோர் எண்ணிக்கை 5,690 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,000 ஆக அதிகரித்துள்ளது.

அதாவது மொத்தமாக 605010 பேர் உலகம் முழுதும் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனர். 27,982 பேர் மரணமடைந்துள்ளனர், மொத்தம் 183 நாடுகளில் இது நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 104,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,711 பேர் மரணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் 9,134 பேர் மரணமடைந்துள்ளனர், மொத்தமாக 86,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இன்று வரை 81,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,295 பேர் மரணமடைந்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மீது நடத்தப்படும் பரிசோதனை அடிப்படையிலான எண்ணிக்கையாகும் இது, பரிசோதிக்கப்படாமல் பாதிக்கப்பட்டோர் விவரம் இன்னும் முழுதாகத் தெரியவில்லை.

SCROLL FOR NEXT