உலகம்

பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 1,847 பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 1,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''பிரான்ஸில் சனிக்கிழமை நடந்த கணக்கீட்டின்படி கோவிட்-19 காயச்சலால் கடந்த 24 மணிநேரத்தில் 1,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,459 ஆக அதிகரித்துள்ளது.

1,587 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். கோவிட்- 19 காய்ச்சாலால் பாதிக்கப்பட்டவர்களில் 1,525 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கோவிட்-19 காய்ச்சலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கோவிட் காய்ச்சலால் இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

தற்போதைய தகவலின்படி கோவிட் காய்ச்சல் காரணமாக உலகம் முழுவதும் 3,08,231 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT