ரஷ்யாவில் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியது.
இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள் தரப்பில், “ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 24 மணிநேரத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். செவ்வாய்க்கிழமையன்று இப்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 62 மைல்கள். இந்த நிலையில் மீண்டும் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.