தென்கொரியாவில் 6500 குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து அந்த நாட்டு அதிபர் பார்க் கியூன் ஹை உத்தரவிட்டுள்ளார்.
தென்கொரியாவின் 70-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் சிறையில் உள்ள 6527 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அதிபர் பார்க் கியூன் ஹை பிறப்பித்தார்.
தென்கொரியாவின் பிரபல தொழிலதிபர் சே டோ-வான் நிதிமோசடி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவர் உட்பட 12 தொழிலதிபர்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து நீதித்துறை அமைச்சர் கிம் ஹுவான் வாங் நிருபர்களிடம் கூறியபோது, தொழிலதிபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டி ருக்கிறது என்றார்.