உலகம்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் வான்வழித் தாக்குதல்: 23 பேர் பலி

செய்திப்பிரிவு

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்த வான்வழித் தாக்குதலில் 23 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 

இதுகுறித்து போர் கண்காணிப்பு குழு கூறும்போது, “ சிரியாவில் வடகிழக்கில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் சிரிய அரசுப் படைகள்  நடத்திய தாக்குதலில் 23 பேர் பலியாகினர்.  கொல்லப்பட்டவர்களில் பலர் பொதுமக்கள். 

30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் சிரிய அரசு வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும்,  ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக  உள்நாட்டுப் போர்  நடந்து வருகிறது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இதில் சிரியாவின் வடகிழக்குப் பகுதியான இட்லிப் மாகாணம்  மட்டும் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ளது.

இந்த உள்நாட்டுப் போர் காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT