உலகம்

உலகில் புகை பிடிப்பவர்கள் 100 கோடி பேர்: மது அருந்துவோர் 24 கோடி

பிடிஐ

உலகம் முழுவதும் 100 கோடி பேருக்கு புகைப் பழக்கமும் 24 கோடி பேருக்கு குடிப்பழக்கமும் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

“அடிமை பழக்கவழக்கங்கள் மீதான சர்வதேச புள்ளிவிவரம்: 2014 நிலை அறிக்கை” என்ற தலைப்பில் ஒரு சர்வதேச ஆய்வு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலி யாவின் அடிலெய்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் லிண்டா கோவிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின் விவரம்:

உலகில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் (100 கோடி) புகை பிடிக்கின்றனர். சுமார் 5 சதவீதம் பேர் (24 கோடி) மது அருந்துகின்றனர்.

இதுபோல ஹெராயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரம் சேகரிப்பது கடினம். ஆனால், உலகம் முழு வதும் போதை ஊசி போட்டுக் கொள்பவர்கள் 1.5 கோடி பேர் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத போதைப் பொருட்களைவிட சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய தீங்கை விளை விக்கக் கூடியவை என தெரிய வந்துள்ளது.

உலகிலேயே கிழக்கு ஐரோப்பி யர்கள்தான் போதைப் பொருட்களுக்கு அதிக அளவில் அடிமையாகி உள்ளனர். அங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒருவர் 13.6 லிட்டர் மது அருந்துவது தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக வடக்கு ஐரோப் பியர்கள் 11.5 லிட்டர் மது குடிக்கின்றனர். மத்திய, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் இது மிகக்குறைந்த அளவாக (2.1 லிட்டர்) உள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வர்களில் 30 சதவீதம் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். ஓஷனியாவில் இது 29.5 சதவீதமாகவும் மேற்கு ஐரோப்பாவில் 28.5 சதவீதமாக வும் உள்ளது.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT