பிரேசிலில் அதிபர் தில்மா ரூஸ்ஸெஃபின் ஆட்சியில் ஊழல் அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டியும் அவரை பதவி விலக கோரியும் 50 நகரங்களில் போராட்டம் நடைபெற்றது.
பிரேசில் அதிபர் தில்மா ரூஸ்ஸெஃபின் ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்கவும், அதற்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு லட்சக்கணக்கான மக்கள் ஞாயிற்றுக்கிழமை அமைதி பேரணி சென்றனர்.
பிரேசிலின் 50 நகரங்களில் நடந்த இந்த மாபெரும் போராட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக உள்ளூர் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்துக்கு தலைநகர் பிரேஸிலியாவிலும் ரியோ டி ஜெனிரியோ நகரிலும் பொதுமக்களின் வரவேற்பு மிகப் பெரிய அளவில் இருந்தது.