உலகம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி லாரி ஓட்டிய 30 இந்தியர்கள் கைது

செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக வசித்​துக்​கொண்டு, லாரி ஓட்​டுநர்​களாகப் பணி​யாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் விரை​வில் நாடு கடத்​தப்பட உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க சுங்​கம் மற்​றும் எல்​லைப் பாது​காப்பு படை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரிசோனாவின்யுமா செக்​டார் பகு​தி​யில் எல்லை ரோந்​துப் படையினர் கடந்த மே 11 முதல் 15 வரை ‘ஆபரேஷன் செக்​மேட்' என்ற திட்​டத்​தின் கீழ் அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக இருந்த 52 பேரை கைது செய்​தனர். இதில் 36 பேர் கனரக லாரி​களை ஓட்டி வந்​தது கண்​டறியப்​பட்​டது. கைதான ஓட்​டுநர்​களில் 30 பேர் இந்​தி​யாவை சேர்ந்​தவர்​கள். மற்​றவர்​கள் மெக்​சிகோ, எல் சால்​வ​டார் மற்​றும் ரஷ்​யா​வைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்.

இவர்​களிடம் கலி​போர்​னி​யா, நியூ​யார்க், வாஷிங்​டன், வர்​ஜீனியா போன்ற மாகாணங்​களின் வணிக ரீதியி​லான ஓட்​டுநர் உரிமங்கள் இருந்​தன. சிலரிடம் எந்​த​வித​மான ஓட்​டுநர் உரிம​மும் இல்லை. இவர்​களில் பெரும்​பாலானோர் ஜோ பைடன் நிர்​வாகத்தின் போது பெற்ற வேலை​வாய்ப்பு அங்​கீ​கார ஆவணங்களை வைத்​திருந்​தனர். ஆனால் அவை தற்​போது காலா​வ​தி​யாகி​விட்​டன. கைது செய்​யப்​பட்ட அனை​வரும் பெடரல் சட்டத்​தின்​படி விசா​ரணைக்கு உட்​படுத்​தப்​பட்​டு, நாடு கடத்​தப்பட உள்​ளனர்.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

மேலும் அந்த அறிக்​கை​யில், “அமெரிக்​கா​வில் வணி​கரீ​தியி​லான வாக​னங்​களை இயக்​கும் சட்​ட​விரோத நபர்​களை கண்​டறிந்து கைது செய்​வதன் மூல​மும், குடி​யுரிமை சட்​டங்​களை நடை​முறைப்​படுத்​து​வதன் மூல​மும் பொதுப் பாது​காப்பை மேம்படுத்துவதே ‘ஆபரேஷன் செக்​மேட்' நடவடிக்​கை​யின் நோக்கமாகும். பொதுப் பாது​காப்​புக்கு பெரும் அச்​சுறுத்​தலாக விளங்​கும், சட்​ட​விரோத ஓட்​டுநர்​களிடம் இருந்து சமூகத்​தை​யும் சாலைகளை​யும் பாது​காப்​ப​தில் எங்​களுக்​கிருக்​கும் அர்ப்​பணிப்பை ‘ஆபரேஷன் செக்​மேட்' பிர​திபலிக்​கிறது’’ என்​று எல்லைப்​ ​பாது​காப்​புப்​ படை​யின்​ யு​மா செக்​​டார்​ தலைமை அதிகாரி டஸ்​டின்​ ​காடில்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT