உலகம்

இஸ்ரேல் புறப்பட்டு சென்றார் மோடி

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று இஸ்ரேல் புறப்பட்டு சென்றார்.

இந்தப் பயணத்தின்போது தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்நாட்டு பிரதமருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.

இந்தப் பயணத்தின்போது, தீவிரவாத ஒழிப்பு, இருதரப்பு உறவை பலப்படுத்துவது உள் ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோ சனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்புக்குப் பிறகு அறிவியல் தொழில்நுட்பம், தண்ணீர் மேலாண்மை, விண்வெளி உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த நிலையில் இந்த பயணம் குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இஸ்ரேல் நாட்டுக்கான வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுவடையும். மேலும் எனது நண்பர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் (இஸ்ரேல் பிரதமர்) இரு நாடுகள் குறித்து விரிவான பேச்சுவாவார்த்தை நடத்த உள்ளேன்.

மேலும் இந்தச் சந்திப்பில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாடவும் ஆவலாக உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்துக்கே வந்து வரவேற்க உள்ளார். அமெரிக்க அதிபர் அல்லது போப் ஆகியோருக்கு மட்டுமே இதுபோன்ற சிறப்பு வரவேற்பு வழங்கப்படுவது வழக்கம். மேலும் மோடி பங்கேற் கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் நெதன்யாகுவும் கலந்துகொள்ள உள்ளார்.

SCROLL FOR NEXT