உலகம்

இலங்கை போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை - வடக்கு மாகாண அரசே கணக்கெடுக்கும்

செய்திப்பிரிவு

இலங்கை உள்நாட்டுப் போரில் உயிரிழந்தோர் தொடர்பான கணக்கெடுப்பை இலங்கை வடக்கு மாகாண அரசே மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இலங்கை அரசு மேற்கொள்ளும் கணக்கெடுப்பில் சரியான எண்ணிக்கை இருக்காது எனக் கருதுவதால் இம்முடிவை மாகாண அரசு மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாண கவுன்சிலின் மூத்த உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் கூறுகையில், “வடக்கு மாகாண அரசே, போரில் இறந்தோர் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ளும். ஏனெனில் இலங்கை அரசின் கணக்கெடுப்பு விவரங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை” என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுரேஷ் பிரேமச்

சந்திரன் கூறுகையில், “போரால் இறந்தவர்களின் எண்ணிக்

கையைக் குறைத்துக் காட்டவே, இந்தக் கணக்கெடுப்பை ராஜபக்சே அரசு நடத்துகிறது.

உண்மையான எண்ணிக்கையை அறிய வடக்கு மாகாண அரசு கணக்கெடுப்பை நடத்துகிறது” என்றார்.

SCROLL FOR NEXT