உலகம்

நார்வேயில் செம்மொழி தமிழ்விழா

செய்திப்பிரிவு

தமிழ் மொழியைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித் துள்ள நிலையில் தமிழின் சிறப்புரைக்கும் மாநாடுகள், கருத்தரங்குகள் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழர்கள் அதிகம் வாழும் நார்வே நாட்டின் பேர்கன் நகரில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் செம்மொழித் திருநாள் விழா இன்று நடத்தப்படுகிறது.

‘செம்மொழித் தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பிலும், புதுச்சேரி அரசின் பட்டமேற்படிப்பு மையத்தின் பேராசிரியர் மு.இளங்கோவன் ‘செம்மொழியின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

பேர்கன் நகரைச் சேர்ந்த தோவ சிறிபாலசுந்தரம் முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார். பேர்கன் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ந. பூலோகநாதன் வரவேற்கிறார். இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் சண்முகதாஸ் ‘செம்மொழி என்றால் என்ன?’ என்ற தலைப்பிலும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள கக்சுயின் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வுப் பேராசிரியர், மனோன்மணி சண்முகதாஸ்

ஒஸ்லோ நகரைச் சார்ந்த எழுத்தாளர் உமாபாலன் தமிழின் சிறப்பை எடுத்துரைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார். ஆர்த்தி உமாபாலன் நடனம், பிருந்தாவன சாரங்க இசை நிகழ்ச்சி, ஒன்பது பாகை வடக்கு இசை எனக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பேர்கன் தமிழ் ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

பேராசிரியர் வே. தயாளன் செம்மொழி பற்றிய சிறப்புரைகளின் தொகுப்பையும், செம்மொழி தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகளையும் எடுத்துரைக்க உள்ளார். பா. ஜெயசிங்கம் நன்றியுரையாற்ற உள்ளார்

SCROLL FOR NEXT