உலகம்

பின்லாந்தில் ஐபேட் பேட்டரி தானாக தீப்பிடித்ததால் பரபரப்பு

ஐஏஎன்எஸ்

பின்லாந்து நாட்டின் ரொவானியெமியில் ஐபேட் ஒன்றின் பேட்டரி தீப்பிடித்து எரிந்ததால் போன் கடையிலிருந்து வாடிக்கையாளர்கள் அவசமாக வெளியேற்றப்பட்டனர்.

இது குறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, புதனன்று வாடிக்கையாளர் ஒருவர் போன் கடைக்குச் சென்று 2 ஆண்டு பழைய ஐபேட் பேட்டரியை மாற்றக்கோரினார்.

அப்போது கடைக்காரர் பேட்டரியை மாற்றும் போது திடீரென பேட்டரி தீப்பிடித்தது. இதன் புகை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸிற்கும் பரவியது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT