உலகம்

பழம்பெரும் பாகிஸ்தானிய பாடகி ரேஷ்மா காலமானார்

செய்திப்பிரிவு

பழம்பெரும் பாகிஸ்தானிய நாட்டுப்புற இசைப் பாடகி ரேஷ்மா இன்று காலமானார். அவருக்கு வயது 66.

தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஒரு மாத காலமாக கோமா நிலையில், லாகூர் மருத்துவமனையில் இருந்தார்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்ததாக, மருத்துவர்களை மேற்கோள் காட்டி, ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 1947 ஆம் ஆண்டு, இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள பிகானேர் என்ற இடத்தில் பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு அவரது குடும்பம் கராச்சிக்கு குடிபெயர்ந்தது.

பாகிஸ்தானிய நாட்டுப்புற இசை உலகின் அரசியாக திகழ்ந்த இவர் தனது 12 வயதில் முதன்முதலாக ரேடியோ மற்றும் டிவியில் தோன்றி நிகழ்ச்சி நடத்தினார். அது மிகப் பெரிய அளவில் புகழைச் சேர்த்தது.

பாகிஸ்தானிய பாடல்கள் மட்டுமின்றி, இந்திய திரைத் துறையிலும் 1960களில் பங்காற்றியிருக்கிறார் ரேஷ்மா.

SCROLL FOR NEXT