ஈரானுடன் போர் செய்ய விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.
இதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரான் மோதல் அதிகமாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா? என்ற அச்சம் நீடித்து வந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ சமீபத்தில் ஈரானுடன் போர் செய்ய அமெரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஈரானுடன் போர் செய்ய தனக்கு விரும்பமில்லை என்றும். அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஈரான் - அமெரிக்க இடையே உள்ள பதற்றத்தை தணிக்க வழிகளை கணடறியும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.