துருக்கியில் பெண்கள் ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
துருக்கியில் உள்ள பக்சிலர் மாவட்டதில் மாநகராட்சி அமைப்பு ஒன்று, பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு மாதம் பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு வாரத்துக்கு 2 மணி நேரம் நடைபெறுகிறது.
இந்தப பயிற்சி வகுப்பில் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ள விதிமுறைகள்தான் தற்போது துருக்கியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த பயிற்சி வகுப்பில் பெண்கள் நாக்கால் ஐஸ்கிரீமை சாப்பிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாம்.
இதனைத் தான் தற்போது சமூக ஊடகங்களில் அந்த நாட்டு பெண்கள் ஐஸ்கிரீமை இனி நாம் உருகிய பின் தான் சாப்பிட வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது மிகவும் ஆபத்தான போக்கு பெண்கள் ஐஸ்கிரீமை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூற இவர்கள் யார்? நாங்கள் எப்படி இருகிறோமோ அப்படியே எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று துருக்கி பெண்கள் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.