இறந்த தன் குட்டி திமிங்கலத்தின் உடலைச் சுமந்துகொண்டு, இரண்டு வாரங்களாக கடலில் சுற்றிய தாய் திமிங்கலத்தின் செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
பசிபிக் கடலில் உள்ள திமிங்கலங்களின் எண்ணிக்கையை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் 'ஜெ 35' என்று பெயரிடப்பட்ட திமிங்கலத்தை விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தபோது மனதை நெகிழும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தரப்பில், " ஜெ 35 திமிங்கலம் ஒன்று பிரசவத்தின்போது இறந்த குட்டி பெண் திமிங்கலத்தைக் கடந்த இரண்டு வாரங்களாக பசிபிக் கடல் மற்றும் கனடா, அமெரிக்காவின் வடமேற்குப் பகுதிகளில் சுமந்துகொண்டு சுற்றி இருக்கிறது. இதனைக் கடந்த வெள்ளிக்கிழமை நாங்கள் கண்டறிந்தோம்'' என்றனர்.
17 நாட்கள் முடிவில் ஜெ 35 தனது குட்டியைக் கடலில் போட்டு அங்கிருந்து நகர்ந்த்து மிகுந்த உணர்வுப்பூர்வத் தருணமாக இருந்ததாகவும், பசிபிக் கடலில் கடந்த 20 வருடங்களாக பிரசவத்தின்போது வெறும் 25% திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.