நம்ம ஊரு நடப்பு

மாநில கராத்தே போட்டியில் கோவில்பட்டி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

செய்திப்பிரிவு

கோவில்பட்டி

விருதுநகரில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் கள் சிறப்பிடம் பிடித்தனர்.

மாநில அளவிலான கராத்தே “சண்டை பயிற்சி” போட்டிகள் விருதுநகரில் நடந்தன. இதில் 7 மாவட்டங்களில் இருந்து 350 பேர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 7-ம் வகுப்பு மாணவர்கள் சிவா, ராகுல், மாணவி சரண்யா, ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். 7-ம் வகுப்பு மாணவர் அல்சுஹேல், 5-ம் வகுப்பு மாணவி லக்சிதா,4-ம் வகுப்பு மாணவர் காவியகுரு ஆகியோர் 2-ம் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவி களை கோவில்பட்டி எம்.எம். வித் யாஷ்ரம் பள்ளியின் முதல்வர் முத்துலட்சுமி, துணை முதல்வர் சுதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT