சுற்றுலா

பொதிகை மலையில் டிரெக்கிங் வசதி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொ​திகை மலை​யில் மலை​யேற்ற (டிரெக்​கிங்) வசதி அறி​முகம் செய்​யப்​படும் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பட்​ஜெட்​டில் அறி​வித்​துள்​ளது.

நாடாளு​மன்​றத்​தில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்ட பட்​ஜெட் உரையில் அவர் கூறிய​தாவது: பொதிகை மலை​யில் மலை​யேறும் ஆர்​வம் உள்​ளவர்​களுக்​காக டிரெக்​கிங் வசதி விரை​வில் ஏற்படுத்தப்​படும். இந்த பட்​ஜெட்​டில் நாட்​டின் கலாச்​சார அடையாளங்​களைப் பாது​காப்​ப​தோடு, சாகசச் சுற்​றுலாவை மேம்​படுத்​து​வதற்​கும் விரி​வான திட்​டங்​கள் வகுக்​கப்​பட்​டுள்​ளன.

          

குறிப்​பாக, தமிழகத்​தின் தென் மாவட்​டங்​களில் அமைந்​துள்ள பொதிகை மலைப் பகு​தி​யில் சூழலியல் சமநிலை மாறாமல் மலை​யேற்ற வசதி​களை மேம்​படுத்த நிதி ஒதுக்​கீடு செய்​யப்​படும். அதே போல், உத்​தரா கண்ட் மற்​றும் ஜம்மு காஷ்மீரிலும் மலை​யேற்ற சுற்​றுலா மேம்​படுத்​தப்படவுள்​ளது.

மூன்று புதிய பார்வை மையங்கள்: அதைப் போல​வே, சென்னைக்கு அரு​கிலுள்ள புலி​காட் ஏரி என்று அழைக்​கப்​படும் பழவேற்​காடு ஏரி​யில் இயற்கை ஆர்​வலர்​களை ஈர்க்​கும் வகை​யில், பேர்ட் வாட்ச்​சிங் என்று அழைக்​கப்​படும் பறவை​களைப் பார்த்து ரசிக்​கும் வசதி ஏற்​படுத்​தப்​படும். மொத்​தம் மூன்று புதிய பிரத்​யேகப் பார்வை மையங்​கள் அங்கு சுற்​றுலாப் பயணிகளுக்காக அமைக்​கப்​படும்.

4 ஆயிரம் மின்சார பேருந்துகள்: அந்த வரிசை​யில், தமிழர்​களின் தொன்​மை​யான வரலாற்​றைப் பறை​சாற்​றும் வித​மாக ஆதிச்சநல்லூரில் நவீன கலாச்​சார மையம் அமைக்கப்படவுள்ளது.

அதே​போல் ஒடி​சா, கர்​நாட​கா, கேரளா ஆகிய மாநிலங்​களில் ஆமை​கள் முட்​டை​யிட்டு தங்​களது குஞ்​சுகளைப் பாது​காக்க வசதி ஏற்​படுத்​தப்​படும். அருணாச்சல பிரதேசம், சிக்​கிம், அசாம், மணிப்​பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்​களில் சுற்​றுலா வளர்ச்சி மையங்​கள் ஏற்​படுத்​தப்​படும்.

இந்த மாநிலங்​களில் சுற்​றுலாப் பயணி​களுக்​காக 4 ஆயிரம் மின்சார பேருந்​துகள் வாங்​கப்​படும். அதே​போல் அந்த மாநிலங்களில் மருத்​துவ சுற்​றுலா​வும் மேம்​படுத்​தப்​படும். இதற்காக அடுத்த 5 ஆண்​டு​களில் அந்த மாநிலங்​களில் ரூ.10,000 கோடி நிதி செல​விடப்​படும்.

நாடு முழு​வதும் லோத்​தால், ஹஸ்​தி​னாபூர், சார​நாத் உள்​ளிட்ட 15 தொல்​பொருள் மையங்​களை மேம்​படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்​பரியப் பாது​காப்பு மற்​றும் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்​படுத்​து​வதற்​காக இந்​த நிதி செலவிடப்படும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT