பழநி: விடுமுறை நாட்களை முன்னிட்டு, கொடைக்கானலில் நேற்றுசுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பக்ரீத் பண்டிகை விடுமுறை, கோடை விடுமுறையால் கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், தூண் பாறை, ரோஜா பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்தனர்.
ஏராளமான சுற்றுலா வாகனங்களால் ஆங்காங்கே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று பகலில் மேகமூட்டம் காணப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு மேல் கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.
தரையிறங்கி வந்த மேகக் கூட்டங்கள், பனிமூட்டத்துக்கு நடுவில் இயற்கை காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர்.