கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

 
சுற்றுலா

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட கோடை வாசஸ்தலங்களில் குவிந்த மக்கள்

சீசன் தொடங்கியதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

ஊட்டி / சேலம் / பழநி: கோடை சீசன் தொடங்​கி​யுள்​ள​தால் ஊட்​டி​, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களில் சுற்​றுலா பயணி​கள் கூட்​டம் அதி​கரித்​துள்​ளது.

சமவெளி பகு​தி​களில் கோடைவெயி​லின் தாக்​கம் அதி​கரித்​துள்​ளது. இதற்​கிடையே கடந்த சில நாட்​களுக்கு முன் பிளஸ்-2 மற்​றும் பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்​வு​கள் நிறைவடைந்து பள்​ளி​களுக்கு கோடை விடு​முறை விடப்​பட்​டது. மேலும், தமிழ்​நாட்​டில் தற்​போது தேர்​தலும் முடிவடைந்​துள்​ளது. இதனால், கோடை விடு​முறையை இதமாக கழிக்க, நீல​கிரி மாவட்​டத்​துக்கு சுற்​றுலாபயணி​கள் வருகை அதி​கரித்துவரு​கிறது.

ஊட்டி ரோஜா பூங்​கா​வில் பல வண்​ணங்​களில் பூத்​துக்குலுங்​கிய ரோஜா மலர்களைகண்டு ரசித்​தனர். கேரளம், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதே​போல் குன்​னூர், கோத்​தகிரி, அவலாஞ்சி உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களி​லும் சுற்​றுலா பயணி​கள் வருகை அதிக அளவில் இருந்​தது. சுற்​றுலா பயணி​கள் வருகை அதி​கரித்​ததன் காரண​மாக வியா​பாரம் சூடு​பிடித்​துள்​ள​தால், வியா​பாரி​கள் மகிழ்ச்​சி​யடைந்​துள்​ளனர்.

ஏற்காடு: இதே​போல் ஏற்​காட்​டில் சுற்​றுலா பயணி​கள் குவிந்​தனர். கோடை​கால வெப்​பம் மாணவர்​களுக்கு தொடர் விடு​முறை போன்ற காரணங்​களால் பலரும் குடும்​பத்​துடன் ஏற்​காடுக்கு சுற்​றுலா வரு​கின்​றனர். இங்கு நிலவி வரும் குளு​மை​யான சீதோஷண நிலையை அனுபவிக்க பலரும் ஆர்​வ​முடன் வந்து செல்​கின்​றனர். இதனால், சாலை​யோர கடைகளில் வியா​பாரம் களைக்​கட்​டியது. படகுத்துறை, மான் பூங்​கா, பகோடா பாயின்ட், தாவர​வியல் பூங்​காக்​களில் கூட்டம் அலைமோதியது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் மலர்களை காண குவிந்த சுற்றுலா பயணிகள். படம்:ஆர்.டி.சிவசங்கர்

கொடைக்கானல்: இதே​போல கொடைக்​கானலுக்​கும் நேற்று காலை முதலே சுற்​றுலா பயணி​கள் வருகை அதி​கரித்​தது. இங்​குள்ள பிரையன்ட் பூங்​கா, ரோஜா பூங்​கா, குணா குகை, மோயர் சதுக்​கம், பசுமை பள்​ளத்​தாக்​கு, தூண்​பாறை, பைன் பாரஸ்ட், கோக்​கர்ஸ் வாக் உள்​ளிட்ட இடங்​களில் வெளி​மாவட்​டம் மட்​டுமின்றி கேரளா, ஆந்​தி​ரா, கர்​நாடகா ஆகிய வெளி​மாநிலங்​களில் இருந்​தும் சுற்​றுலா பயணி​கள் அதிக அளவில் வந்​திருந்​தனர்.

சுற்​றுலா பயணி​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து ஏரி​யில் படகு சவாரி மற்​றும் குதிரை சவாரி, சைக்​கிள் ஓட்டி மகிழ்ந்​தனர்.கொடைக்​கானலில் நேற்று பகலில் 26 டிகிரி செல்​சி​யஸ், இரவில் 15 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை நில​வியது.கோடை சீசனை முன்​னிட்டு சுற்​றுலா பயணி​களின் வருகையால் உள்ளூர் வியா​பாரி​கள், மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT