ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக மலர் தொட்டிகள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர். | படம்: ஆர்.டி.சிவசங்கர். |

 
சுற்றுலா

128-வது மலர்க் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா

50 ஆயிரம் வண்ண மலர்ச் செடிகள் வைக்கும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

ஊட்டி: ஊட்டியில் மே மாதம் நடை​பெற​விருக்​கும் 128-வது மலர்க் கண்​காட்​சிக்​காக அரசு தாவர​வியல் பூங்கா முழு வீச்​சில் தயா​ராகி வரு​கிறது. சர்​வ​தேச சுற்​றுலாத் தலமான நீல​கிரி மாவட்​டத்​துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்​கணக்​கான சுற்​றுலாப் பயணி​கள் வந்து செல்​கின்​றனர்.

கடந்த ஆண்டு சுமார் 25 லட்​சம் பேர் வந்த நிலை​யில், இந்த எண்​ணிக்கை இந்த ஆண்டு அதி​கரிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில், கோடைகாலத்​தில் மாவட்ட நிர்​வாகம், சுற்​றுலா மற்​றும் தோட்டக்​கலைத்துறை சார்​பில் கோடை விழா நடத்​தப்​படும்.

இதில் முக்கிய​மாக ரோஜா காட்​சி, மலர்க்கண்​காட்சி மற்றும் பழக்​கண்​காட்சி ஆகியவை அடங்கும். உலக பிரசித்தி பெற்ற இந்த கண்​காட்​சியை காண உள்​நாடு மற்​றும் வெளி​நாடுகளி​லிருந்து சுற்​றுலாப் பயணி​கள் வரு​வார்​கள்.

கண்​காட்சி தொடங்கும் முதல் இரு நாட்​களில் மட்​டும் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்பட்ட சுற்​றுலாப் பயணி​கள் மலர்க்காட்​சியை கண்டு ரசித்து செல்வார்​கள். கண்​காட்​சிக்​கான ஏற்​பாடு​கள் தீவிர​மாக நடை​பெற்று வரும் நிலை​யில் நீல​கிரி மாவட்​டத்​தில் உறைபனி​யின் தாக்​கம் அதிகமாக இருந்​த​தால், வனங்​கள் மற்​றும் புல்​வெளி​கள் காய்ந்து போயுள்​ளன.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல் மைதான​மும் காய்ந்து போய் உள்​ளது. இதனால், பராமரிப்​புப் பணிக்காக புல்​தரை மூடப்​பட்​டுள்​ளது. புல்​தரை​யில் உள்ள பள்​ளங்களை சீரமைக்கஉரம் கலந்த மண்கொட்​டப்​பட்டு, தண்​ணீர் பாய்ச்சப்​பட்டு வரு​கிறது.

மலர்க்​காட்சி மாடம், கண்​ணாடி மாளி​கை​யில் 50 ஆயிரம் வண்ண மலர்த் தொட்​டிச் செடிகள் அடுக்கி வைக்க ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் கூறும்​போது, “இந்த ஆண்டு கோடை மழை சரிவர பெய்​யாத​தால், பூங்​கா​வில் தண்​ணீர் பற்​றாக்​குறை நிலவுகிறது.

கடும் வெயி​லால் செடிகள்வாடி வரு​கின்​றன. இதனால், வெளியி​லிருந்து தண்​ணீர் கொண்டு வந்து செடிகளுக்கு பாய்ச்சி வரு​கிறோம். கடந்த சில நாட்​களாக மழைக்​கான அறிகுறிகள் தென்​படு​கின்​றன. மழை பெய்​தால் பூங்கா பொலிவு பெறும். மழை பெய்​யா​விட்​டால் சிக்​கல் ஏற்​படும். மலர்க்​கண் காட்​சிக்​கான ஏற்​பாடு​கள் துரிதமாக நடை​பெற்று வரு​கின்​றன’’ என்​றனர்.

10 லட்​சம் மலர் நாற்​றுகள்

பொது​மக்​கள், சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் ஜெரேனி​யம், சைக்​லமன், பால்​சம் மற்​றும் பல புதிய ரக ஆர்​னமெண்​டல் கேல், ஓரியண்​டல் லில்​லி, ஆசி​யாடிக் லில்​லி, டேலி​யா, பிகோனி​யா, கேன்​டீடப்ட், பேன்சி, பெட்டுனி​யா, பிளாக்ஸ் உள்ளிட்ட 275 வகை​யான விதைகள், செடிகள் ஜப்​பான், அமெரிக்​கா, ஜெர்​மனி, நெதர்​லாந்து மற்​றும் இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்களி​லிருந்து பெறப்​பட்டு மலர்​செடிகள் உற்​பத்தி செய்​யப்​பட்​டுள்​ளன. பூங்​கா​வின் பல்​வேறு பகு​தி​களில்​ 10 லட்​சம்​ மலர்​ நாற்​றுகள்​ நடவு செய்​யப்​பட்​டுள்​ளன.

SCROLL FOR NEXT