சுற்றுலா

சுற்றுலா பயணிகளுக்காக சென்னை - பக்டோக்ரா இடையே நேரடி விமான சேவை

செய்திப்பிரிவு

சென்னை: கோடை விடு​முறை சுற்றுலா பயணி​களுக்​காக சென்னை - பக்​டோக்ரா - சென்னை இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமான நிறு​வனம் நாளை தொடங்​கு​கிறது.

கோடை விடு​முறை​யில் சுற்றுலா தலங்​களுக்கு குடும்​பத்​துடன் மக்​கள் செல்ல தொடங்​கி​யுள்​ளனர். மேற்​கு​வங்​கம் மாநிலத்​தில் பக்​டோக்ரா நகரம் புகழ்​பெற்ற மலை வாசஸ்தல சுற்​றுலா தலமாக திகழ்​கிறது.

இந்த பக்​டோக்ரா நகருக்கு ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமான நிறு​வனம், சென்​னை​யில் இருந்து நேரடி விமான சேவையை நாளை (1-ம் தேதி) முதல் தொடங்​கு​கிறது. இந்த விமானம் திங்​கள் தவிர, வாரத்​தில் 6 நாளும் இயக்​கப்​படு​கிறது.

சென்​னை​யில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்​படும் விமானம் மாலை 6.20 மணிக்கு பக்​டோக்ரா சென்​றடைகிறது. பக்​டோக்​ரா​வில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்​படும் விமானம் நண்​பகல் 12.20 மணிக்கு சென்னை வந்​தடைகிறது.

பக்​டோக்ரா சுற்​றுலாத் தலமாக மட்​டும் இல்​லாமல், சென்​னை​யில் இருந்து செல்​பவர்​களுக்கு கிழக்கு இமயமலை​யின் நுழைவு வாயி​லாக​வும் இருப்​ப​தால், இந்த விமான சேவைக்கு வரவேற்பு அதி​கரித்​துள்​ளது.

அதே​போல், கோடை விடு​முறைக்​காக புனே, மும்​பை, கொச்​சி, பாட்​னா, சண்​டிகர், கொல்​கத்​தா, அகம​தா​பாத் உள்​ளிட்ட நகரங்​களுக்​கும் நாளை முதல் கூடு​தல் வி​மான சேவை​களை ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ்​ வி​மான நிறு​வனம்​ தொடங்​குகிறது.

SCROLL FOR NEXT