தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் ரெட்மி 14C 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களை கருத்தில் கொண்டு இது அறிமுகமாகி உள்ளது.

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 14சி 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இது 2025-ம் ஆண்டு இந்தியாவில் சியோமி அறிமுகம் செய்துள்ள முதல் போன் ஆகும். வரும் 10-ம் தேதி முதல் விற்பனை ஆரம்பமாகிறது. கடந்த 2023 டிசம்பரில் வெளிவந்த ரெட்மி 13சி போனின் மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிப்பாக இது வெளிவந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

SCROLL FOR NEXT