ஸ்டாலின்
சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியபோது, “சட்டப்பேரவையில் ‘எங்கே உங்க அப்பாவை காணோம்’ என்று திமுக தலைவரை குறிப்பிட்டு முதல்வர் விஜய் பேசி இருக்கிறார். மிக விரைவாக சட்டப்பேரவையில் அவர் பொறுப்பேற்பார். அது உறுதி” எனத் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை தொகுதிகள் மற்றும் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளதால், மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.