தமிழகம்

டிச.30-ல் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல்

செய்திப்பிரிவு

கூட்​டணி குறித்து சேலத்​தில் டிசம்​பர் 30-ம் தேதி நடை​பெறும் பொதுக்​குழு​வில் முடிவு செய்​யப்​படும் என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​தார்.

பாமக மற்​றும் வன்​னியர் சங்க மாவட்ட தலை​வர், செய​லா​ளர்​கள், மாநில நிர்​வாகி​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் பாமக நிறு​வனர் ராம​தாஸ் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது.

அப்​போது ராம​தாஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “இடஒதுக்கீடு கேட்டு வன்​னியர் சங்​கம், பாமக சார்​பில் தமி​ழ​கம் முழு​வதும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கங்​கள் முன்பு டிசம்​பர் 12-ம் தேதி போராட்​டம் நடை​பெற உள்​ளது. சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும். அதற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்​கும் ஊடகங்​களுக்கு நன்​றி.

ஊடகங்​களை நம்பி தான் நாங்​கள் இந்த போராட்​டத்தை நடத்​துகி​றோம். போராட்​டத்தை நீங்​கள் தான் பெரி​தாக காண்​பிக்க வேண்​டும். சென்​னை​யில் நடை​பெறும் போராட்​டத்​தில் நான் கலந்​து​கொள்​கிறேன். கூட்​டணி குறித்து சேலம் மாவட்​டம் தலை​வாசலில் வரும் டிசம்​பர் 30-ம் தேதி நடை​பெறும் பொதுக்​குழு​வில் முடிவு செய்​யப்​படும். கூட்​டணி முடிவை முதலில் ஊடகத்​திடம்​தான் சொல்​வோம். பாமக இளைஞர் சங்க தலை​வர் தமிழ்​குமரன் தேர்​தலில் போட்​டி​யிடு​வார்” என்​றார்.

இதனிடையே, பாமக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி கூறுகை​யில், “ரா​ம​தாஸ் மற்​றும் அன்​புமணி இடையே பிரி​வுக்கு நான்​தான் காரணம் என்று வதந்தி பரப்​பு​கின்​ற​னர். நானும், எங்​கள் கட்​சி​யின் சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ அருளும் ராஜி​னாமா செய்ய வேண்​டும் என்​கின்​ற​னர். நல்​லது நடக்​கும் என்​றால், நான் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​யத் தயார்” என்​றார். ஆனால், சேலம் எம்​எல்ஏ அருள் கூறுகை​யில், “ராஜி​னாமா குறித்த ஜி.கே. மணி​யின் கருத்​தில் எனக்கு உடன்​பாடு இல்​லை. வாக்​களித்த மக்​களுக்கு என்ன பதில் சொல்​வது?” என்​றார்​.

SCROLL FOR NEXT