தமிழகம்

தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்: எம்எல்ஏக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தலைமை என்ன முடி​வெடுத்​தா​லும் கட்​டுப்பட வேண்​டும் எனவும், மே 10-ம் தேதி வரை சென்​னை​யிலேயே இருக்க வேண்​டும் எனவும் எம்​எல்​ஏக்​களுக்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முதல்​முறை​யாக தேர்​தலை சந்​தித்த நடிகர் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் (தவெக) 108 இடங்​களில் வெற்றி பெற்று தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​தது. ஆளும்​கட்​சி​யாக இருந்த திமுக 59 இடங்​களி​லும், எதிர்​கட்​சி​யான அதி​முக 47 தொகு​தி​களி​லும் மட்​டுமே வெற்​றி​பெற்​றன.

எந்த கட்​சிக்​கும் ஆட்சி அமைப்​ப​தற்​கான தனிப் பெரும்​பான்மை கிடைக்​க​வில்​லை. இதனால் தொங்கு சட்​டப்​பேரவை உரு​வாகி​யுள்​ளது. இதற்​கிடையே ஆட்​சி​யமைக்​கத் தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​காத​தால் தவெக தலை​வர் விஜய் பெரும் சிக்​கலை எதிர்​கொண்​டுள்​ளார்.

இதற்​காக அதி​முக, காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக உள்​ளிட்ட கட்​சிகளிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இதில், காங்​கிரஸ் மட்​டுமே தவெக​வுக்கு ஆதரவு அளிப்​ப​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது. மற்ற கட்​சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முன்​வ​ராத​தால் தவெக தவிப்​பில் ஆழ்ந்​துள்​ளது.

இந்​நிலை​யில், திமுக எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று மாலை நடை​பெற்​றது. இதில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன், இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி ஸ்டா​லின், எம்​எல்​ஏக்​கள் மற்​றும் முக்​கிய நிர்​வாகி​கள் பலர் கலந்​து​கொண்​டனர்.

கூட்​டத்​தில் ஸ்டா​லின் பேசும்​போது, “கட்​சி​யின் நலன் கருதி சில முடிவு​களை எடுக்க வேண்​டி​யுள்​ளது. தலைமை என்ன முடி​வெடுத்​தா​லும் கட்​டுப்பட வேண்​டும். மேலும், எம்​எல்​ஏக்​கள் மே 10-ம் தேதி வரை சென்​னை​யிலேயே தங்​க​ியிருக்க வேண்​டும்” என்று உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதுத​விர தேர்​தலில் எந்​தக் கட்​சிக்​கும் தனிப்​பெரும்​பான்மை கிடைக்​காத​தால் நெருக்​கடி​யான சூழல் ஏற்​பட்​டுள்​ளது. இன்​னொரு தேர்​தலுக்கு தமிழகம் தயா​ராக இல்​லாத நிலை​யில், நமது மாநிலத்​தில் நிலை​யான ஆட்சி அமைய வேண்​டும்.

இத்​தகைய சூழலில் உரு​வாகும் அரசி​யல் நிலை​மை​களை ஆராய்ந்து அவசர முடிவு​களை உடனே எடுக்​கும் அதி​காரம் தலை​வருக்கு வழங்​கப்​படு​கிறது. கூட்​ட​ணியை முறித்​துக்​கொண்ட காங்​கிரசுக்கு கண்​டனம் உள்​ளிட்ட 4 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

அதன்​பின் திமுக செய்​தித்​தொடர்​பாளர் டிகேஎஸ் இளங்​கோவன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தி​முக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் 28 இடங்​களில் போட்​டி​யிட்டு 5 இடங்​களில்​தான் வெற்றி பெற்​றுள்​ளது. மீத​முள்ள 23 இடங்​களில் அவர்​களை தோற்​கடித்​தது யார்? இதையெல்​லாம் சிந்​திக்​காமல் தவெக​வுக்​கு ஆதரவு தரு​கிறார்​கள்.

அனைத்து மாநிலங்​களி​லும் இதைத்​தான் காங்​கிரஸ் செய்​து​வரு​கிறது. திமுக, அதி​முக கூட்​டணி இல்லை என ஸ்டா​லின் சொல்​லி​விட்​டார். அதே​நேரத்​தில் கூட்​டணி குறித்து ஸ்டா​லின் என்ன முடிவு எடுக்​கிறாரோ அதை ஏற்​போம். விஜய் ஆட்சி அமைக்​க​வி​டா​மல்​ நாங்​கள்​ எப்​படி தடுக்​க முடியும்​” என்றார்.

SCROLL FOR NEXT