தமிழகம்

விஜய் வெற்றி: பிரசாந்த் கிஷோர் அன்று சொன்னது இன்று பலித்தது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழக வெற்​றிக் கழக தலை​வர் விஜய் வெற்றி பெறுவார் என்ற தேர்​தல் வியூக நிபுணர் பிர​சாந்த் கிஷோரின் முந்தைய கணிப்பு பலித்​திருக்​கிறது.

கடந்த 2025ம் ஆண்டு தொடக்​கத்​தில் தனி​யார் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: விஜய் தனித்துப் போட்​டி​யிட்​டால் அவர் அதிக இடங்​களில் வெற்றி பெறுவதோடு மட்டும் அல்லாமல் ஒட்​டு மொத்த தமிழகத்​தை​யும் அவர் வெல்​வார். இது நிச்​ச​யம்.

பாஜக​வுடன் அதி​முக கூட்​டணி அமைத்​து, இப்​போதைய திமுக கூட்​டணி நீடித்​து, விஜய் தனித்​துப் போட்​டி​யிட வேண்​டும். இந்த அரசி​யல் சூழலில் விஜய் அமோக வெற்றி பெறு​வார். இவ்​வாறு அவர் தெரி​வித்​திருந்​தார். அவரது கணிப்பு அப்​படியே பலித்திருக்கிறது.

SCROLL FOR NEXT