சென்னை அடுத்த கோவளத்தில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழக முதல்வர் விஜய்.

 
தமிழகம்

தொகுதி மறுவரையறைக்கு உறுதிமொழி: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் அமித் ஷாவிடம் விஜய் வலியுறுத்தியது என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: ‘‘தொகுதி மறு​வரையறை விவ​காரத்​தில் நாடாளு​மன்​றத்​தில் எந்​த மாநிலத்​தின் பிர​தி​நி​தித்​துவ சதவீத​மும் குறை​யாது என்ற தெளி​வான சட்​டப்​பூர்வ உறு​தி​ மொழியை வழங்க வேண்​டும்’’ என்று தென் மாநில முதல்​வர்​களின் மாநாட்டில் தமிழக முதல்​வர் விஜய் வலி​யுறுத்​தினார்.

தென் மாநில முதல்​வர்​கள் அடங்​கிய, தென் மண்டல குழு​வின் 31-வது மாநாடு, சென்னை அருகே கோவளத்​தில் உள்ள ஓட்​டலில் நேற்று நடை​பெற்​றது.

மத்திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா தலை​மை​யில் நடந்த மாநாட்டில் தமிழக முதல்​வர் விஜய், கேரள முதல்​வர் வி.டி.சதீஷன், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார், தெலங்​கானா துணை முதல்​வர் மல்​லுபட்டி விக்​ர​மார்க்​கா, புதுச்​சேரி துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ்​நாதன், அந்​த​மான்நிக்​கோபர் தீவு​களின் துணை நிலை ஆளுநர் தேவேந்​திர குமார் ஜோஷி, லட்​சத்​தீவு​களின் நிர்​வாக அலு​வலர் பிரபுல் படேல், தென்மண்டல குழு மாநிலங்​களின் அமைச்​சர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்றனர்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளிநாடு சென்றுள்ளதால், மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. தனக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாநாட்டைப் புறக்கணித்தார்.

மாநாட்​டில் தமிழக முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில், தென் மாநிலங்​கள் 30 சதவீதத்​துக்​கும் அதி​க​மாகப் பங்​களிக்​கின்​றன. தென் மாநிலங்​கள் இணைந்து செயல்​படு​வதன் மூலம், ஒட்​டுமொத்த இந்​தி​யா​வை​யும் ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி வேக​மாக நடத்​திச் செல்ல முடி​யும்.

சட்​ட​விரோத ஆன்​லைன் மருந்து விற்​பனையைத் தடுக்க மத்​திய அரசு கடுமை​யான சட்​டங்​களை இயற்ற வேண்​டும். போதைப்​பொருள் கடத்​தல், உற்​பத்தி மற்​றும் விநி​யோக நெட்​வொர்க்​கு​களை உடைக்க மாநிலங்​களுக்கு இடையே உளவுத் தகவல்​களைப் பகிர்ந்து கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இது ‘போதைப் பொருள் இல்​லாத தமிழ்​நாடு’ மற்​றும் ‘போதைப் பொருள் இல்​லாத தென் இந்​தி​யா’ உரு​வாக வழி​வகுக்​கும்.

தென் மாநிலங்​கள் எல்​லைகளைத் தாண்டி ஒரே பொருளா​தா​ரப் பிராந்​தி​ய​மாகச் சிந்​திக்க வேண்​டும். இதற்​குச் சிறந்த உதா​ரண​மாக, கர்​நாட​கா​வின் பொம்​மசந்​தி​ரா​வில் இருந்து தமிழகத்​தின் ஓசூர் வரை பெங்​களூரு மெட்​ரோவை நீட்​டிக்​கும் திட்​டத்​தைக் கொண்​டுவர வேண்​டும்.

இதன் மூலம் பெங்​களூரு​வின் எலெக்ட்​ரானிக் சிட்​டியை​யும், வேக​மாக வளர்ந்து வரும் தொழில் மைய​மான ஓசூரை​யும் இணைத்​து, நமது இரு மாநிலங்​களின் தொழிலா​ளர்​களை​யும் பொருளா​தா​ரங்​களை​யும் ஒன்​றிணைக்​கும் தென்​னிந்​தி​யா​வின் முதல் மாநிலங்​களுக்கு இடையே​யான மெட்ரோ இணைப்​பு​களில் ஒன்றை உரு​வாக்க முடி​யும். மாநில எல்​லைகளைக் கடந்து கூட்டு உள்​கட்​டமைப்பு என்ன சாதிக்க முடி​யும் என்​ப​தற்​கான ஒரு முன்​மா​திரி​யாக இந்​தத் திட்​டத்தை நான் வரவேற்​கிறேன்.

மேலும், 1,076 கி.மீ. நீள​முள்ள நீண்ட கடற்​கரையைக் கொண்ட தமிழ்​நாடு, கடல்​சார் பொருளா​தா​ரத்​தின் திறனை முழு​மை​யாகப் பயன்​படுத்​தத் தயா​ராக உள்​ளது. துறை​முகங்​கள், உள்​நாட்​டுக் கப்​பல் போக்​கு​வரத்​து, மீன் வளம் மற்​றும் கடற்​கரை சுற்​றுலா ஆகிய​வற்றை ஒருங்​கிணைப்​ப​தன் மூலம் தளவாடச் செல​வைக் குறைத்​து, உலகளா​விய முதலீடு​களை ஈர்க்க முடி​யும்.

மாநிலங்​களுக்கு இடையே​யான நதிநீர் விவ​காரங்​களில், கீழ்​மடை மாநிலங்​களின் உரிமை​கள் முழு​மை​யாகப் பாது​காக்​கப்பட வேண்​டும். உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பு​களை​யும், தீர்ப்​பா​யங்​களின் உத்​தர​வு​களை​யும் அனைத்து மாநிலங்​களும் மதிக்கவேண்​டும். காவிரி​யிலும், முல்​லைப்​பெரி​யாறி​லும் சட்​டப்​பூர்வ நடை​முறை​களின்​படி நீர்​மட்​டம் மற்​றும் நீர் பகிர்வு உறுதி செய்​யப்பட வேண்​டும்.

மாநிலத்​தில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் மற்​றும் ஆயுஷ் படிப்​பு​களில் மாநில ஒதுக்​கீட்​டின் கீழ் உள்ள அனைத்து இடங்​களை​யும் 12-ம் வகுப்பு மதிப்​பெண்​களின் அடிப்​படை​யில் மட்​டுமே நிரப்ப தமிழகத்தை அனு​ம​திக்க வேண்​டும். மேலும், 2026-ம் ஆண்​டுக்​கான தொகுதி மறு​வரையறை மசோதா பரிசீலிக்​கப்​படும் நிலை​யிலும், பெரும்​பான்​மை​யாக மக்​கள் தொகை​யின் அடிப்​படை​யில் தொகுதி மறு​வரையறை செய்​யப்​பட்​டால் நாடாளு​மன்​றத்​தில் நமது கூட்​டுக் குரல் குறையக் கூடும் என்ற கவலை தென் மாநிலங்​களிடையே உள்​ளது.

தேசிய இலக்​கு​களை நிறைவேற்​றும் மாநிலங்​களைப் பொதுக் கொள்கை தற்​செய​லாகத் தண்​டிப்​ப​தாக இருக்​கக்கூடாது. எனவே, மக்​கள் தொகை நிலைப்​படுத்​தலில் அது அடைந்தவெற்​றி​யின் காரண​மாக நாடாளு​மன்​றத்​தில் எந்​தவொரு மாநிலத்​தின் பிர​தி​நி​தித்​துவ சதவீத​மும் குறை​யாது என்ற தெளி​வான சட்​டப்​பூர்வ உறு​தி​மொழியை மத்​திய அரசு வழங்க வேண்​டும்.

இத்​தகைய அணுகு​முறை சமத்​து​வக் கொள்​கைகளை நிலைநிறுத்​தும். ஜனநாயகத்​தில் அனைத்து மாநிலங்​களின் நம்​பிக்​கை​யை​யும் வலுப்​படுத்​தும். இவ்​வாறு முதல்​வர் விஜய் பேசி​னார். கூட்​டத்​தில், முதல்​வர் விஜய் அனை​வரை​யும் வரவேற்​றார். தமிழக தலை​மைச் செயலர் மு.​சாய்​கு​மார் அனை​வருக்​கும் நன்றி தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT