சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 43-வது வணிகர் தின மாநாடு மே 5-ம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43-வது வணிகர் தின மாநாடு, வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடாக திருவாரூரில் மே 5-ம் தேதி நடத்தப்பட்ட உள்ளது.
மாநாட்டுப் பந்தல் கால்கோள் விழா ஏப்.5-ம் தேதி காலை 10.05 மணிக்கு நடைபெறும். ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்பட்ட சட்டங்களின் அடிப்படையில், வணிகர்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.
தேசத்துக்கான வருவாயை ஈட்டுவதற்கான கட்டமைப்பை கொண்டிருக்கும் வணிகர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கும் நிலை உருவாக வேண்டும்.
அதற்கான விழிப்புணர்வு, எழுச்சியை வணிகர்களிடம் ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.