திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கையில் வேலுடன் தவெக தலைவர் விஜய்.

 
தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கையில் வேலுடன் விஜய் உற்சாகம்: பூர்ணகும்ப மரியாதையோடு வரவேற்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தவெக தலை​வர் விஜய் நேற்று அதி​காலை திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில் தவெக தலை​வர் விஜய் நேற்று அதி​காலை திடீரென திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்​தார்.

இதற்​காக நேற்று முன்​தினம் இரவு 10.30 மணி​யள​வில் அவர் தனது இல்​லத்​தில் இருந்து புறப்​பட்டு சென்னை விமான நிலை​யம் சென்​று, அங்​கிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்​தார். அங்​கிருந்து கார் மூலம் அதி​காலை 4.45 மணி​யள​வில் திருச்​செந்​தூர் வந்​தடைந்​தார்.

பூரண கும்ப மரி​யாதை

திருச்​செந்​தூரில் உள்ள தனி​யார் ரிசார்ட்​டுக்​குச் சென்ற அவர், அங்கு பட்டு வேட்​டி, சட்டை அணிந்து கொண்டு அதி​காலை 5.10 மணி​யள​வில் கோயில் வளாகத்​துக்கு வந்​தார்.

பேட்​டரிகார் மூலம் பிர​காரத்​துக்கு வந்த அவர், கோயில் அருகே உள்ள கடலில் கால் நனைத்து விட்டு உள்ளே வந்​தார். சண்​முக விலாசம் மண்​டபம் பகு​தி​யில் அவருக்கு திரிசுதந்​திரர்​கள் சார்​பில் பூரணகும்ப மரி​யாதை மற்​றும் 2 அடி நீள​முள்ள வேல் வழங்கி வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

அதி​காலை 5.40 மணி​யள​வில் மூல​வர் சந்நிதி​யில் அமர்ந்து விஸ்​வரூப தரிசனத்​தில் பங்​கேற்று மூல​வர் சுப்​பிரமணி​யரை வழிபட்​டார். தொடர்ந்து சண்​முகர், பஞ்​சலிங்​கம், தட்​சிணா​மூர்த்​தி, சத்ருசம்​ஹார மூர்த்​தி, பெரு​மாள் சந்நிதி​களில் தரிசனம் செய்​து​விட்டு வடக்கு வாசல் வழியே காலை 6.20 மணி​யள​வில் வெளியே வந்​தார்.

அங்​கிருந்து தனி​யார் ரிசார்ட்​டுக்கு சென்ற அவர் 7.15 மணி​யள​வில் திருச்​செந்​தூரில் இருந்து கார் மூலம் புறப்​பட்டு தூத்​துக்​குடி விமான நிலை​யம் சென்​று, அங்​கிருந்து தனி விமானத்​தில் காலை 9 மணி அளவில் சென்​னைக்கு புறப்​பட்​டுச் சென்​றார்.

போலீஸ் பாதுகாப்பு

அவருடன், பொதுச்​செய​லா​ளர் ஆனந்த் மற்​றும் சில முக்​கிய நிர்​வாகி​கள் மட்​டும் வந்​திருந்​தனர். விஜய் வரு​கையை அறிந்து அதி​காலை​யிலேயே ஏராள​மான தொண்​டர்​கள் கோயில் வளாகத்​தில் திரண்​டிருந்​தனர். தூத்​துக்​குடி எஸ்​.பி. மதன் தலை​மை​யில் போலீ​ஸார் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​களைச் செய்​திருந்​தனர்.

மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்ள நிலை​யில் திருச்​செந்​தூர் கோயி​லில் விஜய் சுவாமி தரிசனம் செய்​திருப்​பது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி ​உள்​ளது.

ஜோதிடரின் ஆலோசனைப்படி அடுத்து சீரடி செல்ல திட்டம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில், தனது ஆஸ்தான ஜோதிடரை அழைத்து, அவரிடம் விஜய் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘திருச்செந்தூர், சீரடி தரிசனம் அவசியம்’ என கூறியுள்ளார். இதனால்தான் விஜய் நேற்று திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்தார். ஜோதிடரின் ஆலோசனைப்படி, அடுத்து சீரடியும் செல்கிறார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய குதிரை பேரத்தை தவிர்க்க, சென்னையில் நாளை (ஏப்.30) தவெக வேட்பாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டுகிறார். அதில் பல உத்தரவுகளை பிறப்பிக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT