இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்

 
தமிழகம்

‘எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை!’ - விஜய் திட்டவட்டம்

தமிழினி

சென்னை: “மதச்சார்பற்ற கொள்கையில் தவெக உறுதியாக உள்ளது. தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம்” என அக்கட்சியில் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ‘எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை’ என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் இன்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து, பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி என பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்கள். தவெக எந்த டீமிலும் இல்லை. மக்கள் டீமில் தான் இருக்கிறது என தெரிந்ததும் வேறு என்ன அவதூறு பரப்பலாம் என யோசித்தனர்.

தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம். மதச்சார்பற்ற கொள்கை, மற்றும் மதச்சார்பற்ற சமூக நீதியில் தவெக உறுதியாக உள்ளது. அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்தவித சமரசமமும் வைத்துக்கொள்ள போவதில்லை. இது குறித்த பேச்சுகே இடமில்லை. யார் என்ன அவதூறு பரப்பினாலும், அதை நம்ப வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த டார்கெட்டை அடைய முடியும்” என்று அவர் தெரிவித்தார். இதன்மூலம் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடுவதை அவர் உறுதி செய்தார்.

          

தவெக தனித்துப் போட்டி: தமி​ழ​கத்​தில் விரை​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளது. ஆளுங்​கட்​சி​யான திமுக தலை​மை​யில் காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக, மதி​முக மற்​றும் புதி​தாக இணைந்​துள்ள தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகள் இருக்​கின்​றன. கடந்த கால கசப்​பு​களை மறந்து மீண்​டும் இணைந்​துள்ள அதி​முக, பாஜக மற்​றும் பாமக உள்​ளிட்ட கட்​சிகள் கைகோத்​திருக்​கின்​றன. வழக்​கம்போலவே தேர்​தலில் தனித்து நிற்​பது என்ற ஒற்றை இலக்​குடன் சீமான் களம் காண்​கி​றார். இந்தச் சூழலில் தவெக​வின் ‘தனித்து போட்​டி’ என்ற முடிவு, தமிழக அரசி​யலில் நான்​கு​முனை போட்​டியை உரு​வாக்​கி​யுள்​ளது.

இதற்​கிடை​யில், கடந்த சில நாட்​களாக பாஜக மேலிடம், குறிப்​பாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ​ஷா, விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​குள் கொண்டு வரத் தீவிர முயற்சி எடுத்​த​தாகத் தகவல்​கள் வெளி​யாகின. தமி​ழ​கத்​தில் திமுகவை வீழ்த்த விஜய்​யின் வாக்கு வங்கி அவசி​யம் என பாஜக கரு​தி​யது. இதற்​காக ஆந்​திர துணை முதல்​வர் பவன் கல்​யாண் மூல​மாக​வும் பேச்​சு​வார்த்​தைகள் நடத்​தப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

கூட்​ட​ணிக்​குத் தூது வந்​தவர்​களிடம் விஜய் தரப்​பில் வைக்​கப்​பட்ட நிபந்​தனை​கள் அரசி​யல் வட்​டாரத்தை அதிர வைத்​தன. “90 தொகுதி​கள் ஒதுக்​கப்பட வேண்​டும்; இரண்​டரை ஆண்​டு​கள் முதல்​வர் பதவி வழங்​கப்பட வேண்​டும்” என்ற நிபந்​தனை​களை விஜய் தரப்பு முன்​வைத்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதனை அதி​முக பொதுச் ​செய​லா​ளர் எடப்​பாடி பழனி​சாமி ஏற்க மறுத்​த​தால், கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்தை முட்​டுக்​கட்​டை​யில் முடிந்ததாகத் தெரிகிறது. இதை மைய​மாக வைத்து கட்​சிக்​குள் பொதுச் செய​லா​ளர்​களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு இடையே அதி​காரப் போட்டி நிலவி வந்​த​தாகச் செய்​தி​கள் கசிந்​தன.

சமீபத்​தில் கட்சி நிர்​வாகி​களு​டன் நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில், “என்ன நடந்​தா​லும் வரும் தேர்​தலில் நாம் தனித்து தான் போட்​டி​யிடு​கி​றோம்” எனத் தெள்​ளத்​ தெளி​வாகக் கூறிய விஜய், மோதலில் இருந்த நிர்​வாகி​களைச் சமா​தானப்​படுத்தி தேர்​தல் பணிகளை வேகப்​படுத்த உத்​தர​விட்​டுள்​ளார். இருப்​பினும் தொடர்ச்​சி​யாக பாஜக தரப்​பில் கூட்​ட​ணிக்​கான முயற்சி நடந்து வரு​வ​தாக​வும் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இந்தப் பின்னணியில்தான் தவெக தலைவர் விஜய் தற்போது தமது கட்சியின் நிலைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT