மு.வீரபாண்டியன் 
தமிழகம்

விஜய்யால் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: மு.வீரபாண்டியன் கருத்து

கே.சுரேஷ்

“இந்​தத் தேர்​தலில் தவெக தலை​வர் விஜய் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​னாலும், திமுக கூட்​ட​ணி​யின் வெற்​றியை தடுத்து நிறுத்த முடி​யாது” என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் கூறி​னார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் அறந்​தாங்​கி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறிய​தாவது: பிஹார் தேர்​தலில் வாக்கு திருட்​டு, தேர்​தல் விதி​மீறல்​கள் நடந்​துள்​ளன. இந்த விவ​காரத்​தில் தேர்​தல் ஆணை​ய​மும், மத்​திய அரசும் கைகோத்​துள்​ளன. எஸ்​ஐஆர் பணியை வரு​வாய் துறை அலு​வலர்​கள் புறக்​கணித்து இருப்​பதும், பழைய ஓய்​வூ​தி​யம் வேண்​டும் என வலி​யுறுத்தி ஜாக்​டோ- ஜியோ போராட்​டம் அறி​வித்​துள்​ளதும் நியாய​மானது​தான். இதே​போல, திமுக தனது தேர்​தல் வாக்​குறு​தி​களை​யும் முழு​மை​யாக நிறை​வேற்ற வேண்​டும்.

பயிர் பாதிப்பு குறித்து மத்​திய குழு​வினர் ஆய்வு செய்​து​விட்டு சென்​றார்​கள். ஆனால், இது​வரை நிதி கொடுக்​க​வில்​லை. அடுத்த கட்ட போராட்​டத்​தில் ஈடுபட உள்ள தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு நாங்​கள் ஆதரவு அளிப்​போம். இதை அரசி​யல் காழ்​ப்புணர்​வாக முதல்​வர் எடுத்​துக்​கொள்ள மாட்​டார். பிஹாரைப் போன்று தமி​ழ​கத்​தில் வாக்கு திருட்டு நடத்த முடி​யாது. தவெக தலை​வர் விஜய்​யால் தாக்​கத்தை ஏற்​படுத்த முடி​யாது என்று கூற முடி​யாது. ஆனால், அவரால் திமுக கூட்​ட​ணி​யின் வெற்​றியை தடுத்து நிறுத்த முடி​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT