தமிழகம்

“விஜய் எடுத்து வைக்கும் முதல் அடியே பிழை” - வைகோ விமர்சனம்

செய்திப்பிரிவு

ம​தி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கலிங்​கப்​பட்டி போவதற்​காக சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்​தார். விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமி​ழ​கத்​தில் போதைப்​பொருட்​களை ஒழிக்க வலி​யுறுத்தி ஜன. 2-ம் தேதி திருச்சி - மதுரை சமத்​துவ நடைபயணம் தொடங்​கு​கிறேன்.

முதல்​வர் முக. ஸ்டா​லின் பயணத்தை தொடங்கி வைக்​கி​றார். காங்​கிரஸ் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, விசிக தலை​வர் தொல். திரு​மாளவன் உள்​ளிட்ட தலை​வர்​கள் வாழ்த்​துகின்​ற​னர். என்​னுடன் பயணத்​தில் 950 பேர் பங்​கேற்​கின்​ற​னர். தமி​ழ​கத்​தில் ஸ்டா​லின் நடத்​தும் திரா​விட மாடல் நல்​லாட்சி 2026ல் மீண்​டும் அமைய​வேண்​டும் என்ற அரசி​யல் கருத்தை வலி​யுறுத்​து​வேன். திமுக கூட்​டணி உறு​தி​யாக தனி பெரு​ம்பான்மை பெற்று மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்​பது எனது கணிப்பு.

திருப்​பரங்​குன்​றம் விவ​காரம் இந்​துத்​து​வ​வா​தி​களால் திட்​ட​மிட்டு ஏற்​படுத்​தப்​படு​கிறது. திருப்​பரங்​குன்​றம் பிரச்​னை​யில் எவ்​வித கலவர உணர்ச்​சிக்​கும் இடம் கொடுக்​காதது மதுரைக்கு பெரு​மை. இந்த நிலை நீடிக்​கவேண்​டும். மத்​தி​யில் திடீரென வந்தே மாதரம் கொடியை தூக்கி பிடித்து ஆதரவு திரட்​டு​கின்​ற​னர். இதன் மூலம் இந்​துத்​து​வத்தை திணிக்க முயல்​கின்​ற​னர். தமி​ழ​கத்​தில் வேறு​பாடு, மோதலை ஏற்​படுத்த முடி​யாது. திரா​விடத்​தில் ஊறி திளைத்த தமி​ழ​கம் பக்​கு​வப்​பட்ட மாநிலம்.

தவெக தலை​வர் விஜய் இன்​னும் சினிமா டயலாக் தான் பேசுகி​றார். 41 உயிர்​கள் பறி​போனது பற்றி அவர் பதற​வில்​லை. அனு​தாப​மும், இரங்​கலும் தெரிவிக்​காமல் பொறுப்​புணர்ச்சி இன்றி இரவோடு, இரவாக சென்​னைக்கு சென்​றார். 40 நாட்​களுக்​குப் பிறகு இறந்​தவர் குடும்​பங்​களை தன்​னுடைய இடத்​திற்கு வரவழைத்து துக்​கம் விசா​ரித்​தார். இதன் மூலம் அவர் விசித்​திர​மான முறையை பின் பற்றி இருக்​கி​றார். அவர் எடுத்து வைக்​கும் முதல் அடியே பிழை. அவர் எங்கு வேண்​டு​மா​னாலும் பிரச்​சா​ரம் செய்​ய​லாம். அதில் என்ன கருத்​துகள் சொல்​கி​றார் என, கவனித்து பார்ப்​போம்.

SCROLL FOR NEXT