| படம்: ம.பிரபு | 

 
தமிழகம்

சட்டப்பேரவையை ‘ஷூட்டிங் ஸ்பாட்’ ஆக மாற்றிய முதல்வர்: உதயநிதி கடும் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘சட்​டப்​பேர​வையை ‘ஷூட்​டிங் ஸ்பாட்’ ஆக முதல்​வர் விஜய் மாற்​றி​யிருக்​கிறார், பேர​வைத் தலை​வர் இயக்​குந​ராக​வும், அமைச்​சர்​கள் உதவி இயக்​குநர் ​களாக​வும் செயல்​படு​கிறார்​கள்’ என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.

சட்​டப்​பேர​வை​யில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்​த​பின், தலைமை செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் உதயநிதி ஸ்டா​லின் கூறிய​தாவது: சினிமா பாணி​யில், தயார் செய்து வைக்​கப்​பட்​டிருந்த, வசனத்​தைத்​தான் முதல்வர் பதி​லுரை​யில் பேசி​யிருக்​கிறார்.

அப்​போது, சில உண்​மைக்கு மாறான தகவல்​களை அவை​யில் பதிவு செய்​தார். அதனால் நாங்​கள் குறுக்​கிட்​டோம். கொண்டு வந்​திருந்த ஸ்கிரிப்ட்டை பேசி முடிக்​கும் ​வரை எதற்​கும் பதில் சொல்லமாட்​டேன் என்ற தொனி​யில்​தான் முதல்​வர் பேசி​னார்.

பத்​திரிக்​கை​யாளர்​களுக்​கும் அவர் பதில் சொல்​வ​தில்​லை. சட்​டப்​பேர​வை​யில் எங்​களுக்​கும் அவர் பதில் சொல்​வ​தில்​லை. திமுக மீது பழி போடு​வதையே இந்த அரசு பழக்​க​மாகக் கொண்​டிருக்​கிறது. கருணாநிதி படத்​திறப்பு விழா​வில் இரு​முறை தேசிய கீதம் பாடப்​பட்​ட​தாக முதல்​வர் கூறுகிறார்.

குடியரசு தலை​வருக்கு தனி புரோட்​ட​கால் உள்​ளது என்​பதும், ஆளுநருக்கு கிடை​யாது என்​பதும்​கூட முதல்​வருக்கு தெரி​யாதது வருத்​தம் அளிக்​கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ‘நான் முதல்​வன்’ திட்​டம், மின்​வெட்டு பிரச்​சினை, விவ​சா​யிகள் பிரச்​சினை என எந்​த​வித கேள்விக்​கும் தெளி​வான பதிலை அவர் அளிக்​க​வில்​லை.

சட்​டம் ஒழுங்கு பிரச்​சினையை பற்றி கேட்​டதற்கு கடந்த ஆட்​சி​யில் டிஜிபி-யை நியமிக்​க​வில்லை என்​கிறார். சரி, நாங்​கள்​தான் நியமிக்​க​வில்​லை. நீங்​கள் மாற்​றம் என சொல்லி தானே ஆட்​சிக்கு வந்​தீர்​கள். ஒரே நாளில் எல்​லா​வற்​றை​யும் கிழித்து எறிந்​து​விடு​வோம் என்​றீர்​களே, இப்​போது, இந்த 40 நாட்​களில் உங்​கள் காவல்​துறை என்ன செய்து கொண்​டிருக்​கிறது? சட்​டப்​பேர​வையை சினிமா தியேட்​டர்​போல மாற்​றி​விட்​டார்​கள். விசில் அடிக்​கிறார்​கள்.

இனி அமைச்​சர்​கள் பலர் கவர்ச்சி பாடலுக்​கும் டான்ஸ் ஆடவும் ஆரம்​பித்​து​விடு​வார்​கள். முதல்வர் செயற்​கைத்​தன​மாக பேசுகிறார். இங்​கே​யும் நடிக்க ஆரம்​பித்​து​விட்​டார். சட்​டப்​பேரவை தலை​வர் இனி, ‘ஆக் ஷன், கட், ஒன்​ஸ்​மோர்’ என சொல்​ல​வும் ஆரம்​பித்​து​விடு​வார்.

அதே​போல், தலைமை செயல​கத்​துக்​குள், கேர​வன், மேக்​கப்​மேன், சண்​டை பயிற்​சி​யாளர்​கள் என அனை​வரும் வந்​து​விடுவார்​கள். சட்​டப்​பேர​வையை கிட்​டத்​தட்ட, ‘ஷூட்​டிங் ஸ்பாட்’ ஆக மாற்றி வரு​கிறார். இயக்​குந​ராக சட்​டப்​பேரவை தலை​வரும், உதவி இயக்குநர்களாக அமைச்சர்களும் செயல்படுகின்றனர்.

நாங்​கள் ஊழல் செய்​திருக்​கிறோம் என்​கிறார்​களே, ஆதா​ரம் இருந்​தால் நீதி​மன்​றத்தை நாடுங்​கள். அதை சந்​திக்க தயா​ராக நாங்​கள் இருக்​கிறோம். அதை​விட்​டு, பொத்​தாம் பொது​வாக பொதுக்​கூட்​டத்​தில், பிரச்​சார கூட்​டங்​களில் பேசுவதைப்​போல, சட்​டப்​பேர​வை​யில் பேசக்​கூ​டாது.

தேர்​தல் வாக்​குறுதி எதைப்​பற்​றி​யும் முதல்​வர் வாய் திறக்​க​வில்​லை. இந்த ஆட்சி ஒருகேலிக்​கூத்து ஆட்​சி​யாகத்​தான் இருக்​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார் குட்​டிக்​கதைக்கு பதிலடி உதயநிதி ஸ்டா​லின் தனது எக்ஸ் தளப் பதி​வில், “சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் உரைக்கு பதி​லுரை என்ற பெயரில் ‘ஸ்​கிரிப்ட்​’ ட​டாக அவதூறுகளை அள்​ளி வீசி நடிப்​புத் திறனை காட்டி இருக்​கிறார் முதல்​வர்.

பேர​வை​யின் ‘லைவ் கேம​ரா’-வை, சினிமா கேமரா என்று நினைத்​துக்​ கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்​கட்​சிகளின் குறுக்​கீடு​கள் இன்றி ‘சிங்​கிள் டேக்​’-ல் ஷூட் செய்ய வேண்​டும் என்று பேர​வைத்​தலை​வர் மெனக்​கெட்​டது ஏற்​புடையது அல்ல.

எதிர்க்​கட்​சிகள் தூண்​டு​தலில் விவ​சா​யிகள் போராடு​வ​தாக விவ​சா​யிகளைக் கொச்​சைப்​படுத்​து​வது கண்​டிக்​கத்​தக்​கது. குட்​டிக்​கதை சொல்​கிறேன் என்ற அவரது உளறல், அவை மாண்​புக்கு முற்​றி​லும் எதி​ரானது.

செங்​கல்​பட்டு கோர்ட்​டில் ‘கணவனை தேடும் மனைவி கதை’ எல்​லாம் தமிழகத்​துக்கே தெரி​யும். ஆகவே, நடிகர் என்​பதை மறந்​து, இனி​யா​வது தமிழக முதல்​வ​ராக அவர்​ நடந்​து கொள்​ள வேண்​டும்​” என குறிப்​பிட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT