அரவிந்த், விஸ்வேஷ்.

 
தமிழகம்

தமிழக காவல் துறையின் உளவுத் துறையில் கூடுதலாக எஸ்.பி.க்கள் இருவர் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், உளவுத்​துறை ஐஜி-க்கு உதவும் வகை​யில், எஸ்​பி-க்​கள் இரு​வரை நியமித்து டிஜிபி சந்​தீப் ராய்ரத்​தோர் உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் அதிக இடங்​களை கைப்​பற்றி விஜய் ஆட்சி அமைக்க உள்​ளார். இதற்​கான ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கிறது. முன்​ன​தாக, தேர்​தல் நடை​பெற இருந்த நேரத்​தில் உளவுத்​துறை ஐஜி-​யாக இருந்த செந்​தில்​வேலன் மாற்​றப்​பட்​டு, அவிநாஷ் குமார் நியமிக்​கப்​பட்​டார். அவர் அந்த பதவிக்கு புதிது என்​ப​தா​லும், தற்​போது புதிய அரசு பதவி ஏற்க உள்ள நிலை​யிலும், உளவுத்​துறையை மேலும் வலுப்​படுத்​தும் நோக்​கில், தற்​போது, அத்​துறைக்கு கூடுதலாக ஐபிஎஸ் அதி​காரி​களான 2 எஸ்​பி-க்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்​படி, அரியலூர் மாவட்ட எஸ்​பி​யாக இருந்த விஸ்​வேஷ் பாலசுப்​பிரமணி​யம் சாஸ்​திரி, கள்​ளக்​குறிச்சி மாவட்ட எஸ்பி எஸ்​.அர​விந்த் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் பிறப்​பித்​துள்​ளார்.

உளவுத்​துறை​யின் செயல்​பாடு​களை மேம்​படுத்​த​வும், காவல் துறை தொடர்​பான உளவுத் தகவல்​களைத் துரித​மாகக் கையாள்​வதற்​கும், நடந்து முடிந்த தேர்​தல் தொடர்​பான அவசரப் பணி​களில் கலந்து கொள்​ள​வும் இவர்​களின் நியமனம் உதவும் என போலீஸ் அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அடுத்த உத்​தரவு வரும் வரை பெரம்​பலூர் மாவட்ட எஸ்பி அரியலூர் மாவட்ட எஸ்பி பணி​யை​யும், விழுப்​புரம் எஸ்பி கள்​ளக்​குறிச்சி மாவட்ட எஸ்பி பொறுப்​பை​யும் கூடு​தலாக கவனிப்​பார்​கள் என, டிஜிபி உத்​தர​வில் மேலும் தெரி​வித்​துள்​ளார்​. புதிய அரசு பொறுப்பு ஏற்க உள்ளதால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டும் புதிய எஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT