தமிழகம்

‘என்னை நம்பி வாங்க..’ - அதிமுக மாஜிக்களுக்கு செங்கோட்டையன் வலை

செய்திப்பிரிவு

அ​தி​முக​வில் இருந்து தவெக​வுக்கு சென்ற முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கட்​சி​யின் நிர்​வாக குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் மற்​றும் ஈரோடு, கோவை, நீல​கிரி, திருப்​பூர் ஆகிய 4 மாவட்​டங்​களின் அமைப்பு செய​லா​ளர் பொறுப்பு வகித்து வரு​கி​றார். அவர் அதி​முக​வில் அதிருப்​தி​யில் உள்ள முன்​னாள் எம்​எல்​ஏக்​களை இழுக்​கும் முயற்​சி​யில் தீவிர​மாக களம் இறங்​கி​யுள்​ளார்.

குறிப்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் கோட்​டை​யாக கருதப்​படும் சேலம், நாமக்​கல், ஈரோடு, கோவை போன்ற மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய கொங்கு மண்​டலத்​தைச் சேர்ந்த அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏக்​களுக்கு செங்​கோட்​டையன் நேரடி​யாக ஃபோனில் தொடர்​பு​கொண்டு பேசி வரு​கி​றார்.

இதுகுறித்து அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் கூறுகை​யில், “அதி​முக​வில் பழனி​சாமி​யால் ஓரங்​கட்​டப்​பட்ட மற்​றும் அவரின் தலை​மையை ஏற்க விரும்​பாத முன்​னாள், இந்​நாள் எம்​எல்​ஏக்​கள், மாவட்ட, நகர நிர்​வாகி​கள் பலர் உள்​ளனர். இந்த அதிருப்​தி​யாளர்​களுக்கு வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட நிச்​ச​யம் வாய்ப்பு வழங்​கப்​ப​டாது.

அவ்​வாறு ஓரம் கட்​டப்​பட்ட முன்​னாள், இந்​நாள் எம்​எல்​ஏக்​கள் மற்​றும் கட்சி நிர்​வாகி​களை செங்​கோட்​டையன் நேரடி​யாக செல்​போனில் அழைத்​துப் பேசுகி​றார். அவரிடம் தேர்​தல் செல​வுக்கு பணம் எது​வும் இல்லை என்று கூறி​னாலும் ‘என்னை நம்பி வாங்க’ என தெரிவிக்​கி​றார்.

அவரது வார்த்​தையை நம்பி கடந்த சில தினங்​களுக்கு முன் சேலம் மாவட்​டம் ஓமலூரைச் சேர்ந்த முன்​னாள் அதி​முக எம்​எல்​ஏ​வும், சேலம் புறநகர் மாவட்ட எம்​ஜிஆர் மன்ற செய​லா​ள​ரு​மான பல்​பாக்கி கிருஷ்ணன், செங்​கோட்​டையன் முன்​னிலை​யில் தவெக​வில் இணைந்​துள்​ளார். இது​போல் பலருக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்​கப்​பட்டு வரு​கிறது.

யார் யார் எல்​லாம் தவெக​வுக்கு தாவ உள்​ளனர் என்​பது வரும் நாட்​களில் தெரிய​வ​ரும். திமுக உள்​ளிட்ட பிற கட்​சி​யினரை செங்​கோட்​டையன் தொடர்பு கொள்​வது கிடை​யாது. செங்​கோட்​டையனை வைத்து அதி​முகவை, பாஜக பலவீனப்​படுத்தி வரு​கிறது. இதை பழனி​சாமி​யும் நன்கு அறி​வார். ஆனால் மயான அமைதி காத்து வரு​கிறார் என்​றார்​.

SCROLL FOR NEXT