தவெக எம்எல்ஏ செல்வம்

 
தமிழகம்

அடிதடி வழக்கில் தவெக எம்எல்ஏ செல்வம் விடுதலை

செய்திப்பிரிவு

விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்த வேல்முருகனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மனைவியின் சகோதரர் திவாகர், நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக 2016-ல் வேல்முருகன் புகார் அளித்தார். விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்த வேல்முருகனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மனைவியின் சகோதரர் திவாகர், நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக 2016-ல் வேல்முருகன் புகார் அளித்தார்.

அதன்பேரில், விருதுநகர் கிழக்கு போலீஸார் திவாகர், செல்வம், பால மகேந்திரன், பால கர்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்தனர். இந்நிலையிலில் செல்வம் விருதுநகர் எம்எல்ஏ ஆனார்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் பிரதிநிதிகள் மீதான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபாஷினி, எம்எல்ஏ செல்வம் உள்பட 4 பேரையும் விடுவித்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

SCROLL FOR NEXT