தமிழகம்

ரோடு ஷோ அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி தவெக வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: கரூரில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி​யான சம்​பவத்​தையடுத்​து, அரசி​யல் கட்​சிகளின் ரோடு-ஷோக்​கள், பேரணி​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை வகுத்து, தமிழக அரசு கடந்த ஜன.5 அன்று அரசிதழில் வெளி​யிட்​டது.

அரசின் இந்த வழி​காட்டு நெறி​முறை​கள் அங்​கீ​காரம் பெற்ற கட்​சிகள் மற்​றும் அங்​கீ​காரம் பெறாத கட்​சிகள் என பாரபட்​ச​மாக நிறை வேற்​றப்​பட்​டுள்​ள​தால் அதை ரத்து செய்ய வேண்​டும் என தவெக இணைப் பொதுச் செய​லா​ள​ரான சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தபோது இது தொடர்​பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கி விசா​ரணையை தள்ளி வைத்​தனர்.

          
SCROLL FOR NEXT