தமிழகம்

திமுக பாதை​யில் தவெக: அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: திமுக பாதையில் தவெக அரசு பயணிக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்​ஸ்​ தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக முதல்​வர் விஜய் கவனத்​துக்​கு... திமுக ஆட்சி வீழ்ச்​சி​யடைந்​ததற்​கான முக்​கியக் காரணங்​களில் ஒன்​று, ஆளுங்​கட்​சி​யினர் என்ற அதி​கார போதை​யில், மக்​களின் விமர்​சனங்​களை அலட்​சி​யப்​படுத்​தி​யதோடு, எதிர் கருத்​துகளை முடக்​கியது​தான். அதே பாதை​யில் உங்​கள் அரசும் பயணிக்​கிறதோ என்ற அச்​சம் தற்​போது எழுந்​துள்​ளது.

கடந்த ஒரு மாதத்​தில் மட்​டும், சமூக வலை​தளங்​களில் உங்​கள் கட்​சி​யினருடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு​கள் மற்​றும் விமர்​சனங்களுக்​காக மாற்​றுக் கருத்து கொண்ட 25-க்​கும் மேற்​பட்​டோர் மீது வழக்​கு​கள் தொடரப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வரு​கின்​றன.

சமூக வலை​தளங்​களில் தனி​நபர் அவதூறு மற்​றும் வரம்பு மீறிய பேச்​சுகளை கண்​காணிப்​பது அவசி​யம்​தான். ஆனால், ஆட்​சி​யை​யும் ஆளும் கட்​சி​யை​யும் விமர்​சிக்​கும் ஒவ்​வொரு குரலை​யும் வழக்​கு, கைது என்ற அதி​காரத்​தின் மூலம் அடக்க முயற்​சிப்​பது ஜனநாயகத்​துக்கு ஆரோக்​கிய​மானதல்ல.

எதிர் கருத்​துகளும் விமர்​சனங்​களும் ஜனநாயகத்​தின் இயல்​பான அங்​கங்​கள். சிறிய விமர்​சனங்​களுக்​குக்​கூட வழக்​கு, கைது என்ற போக்கு தொடர்​வது துர​திருஷ்ட​வச​மானது. எனவே, இந்​தப் போக்கை உடனடி​யாகத் தடுத்​து, ஜனநாயகக் குரல்​களுக்​கும் விமர்​சனங்​களுக்​கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT