தமிழகம்

தவெக முன்னாள், இந்நாள் நிர்வாகிகளிடையே மோதல்

செய்திப்பிரிவு

சென்னை: தவெக முன்​னாள் மற்​றும் இந்​நாள் நிர்​வாகி​களிடையே மோதல் ஏற்​பட்​டது. இருதரப்​பினரும் சண்​டை​யிட்டு ஒரு​வரை ஒரு​வர் தாக்​கிக் கொண்டு சாலை​யில் உருண்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

சென்னை வளசர​வாக்​கம் 152-வது வார்டு பெத்​தானியா நகரை சேர்ந்​தவர் சமீர். இவர் கடந்த 16-ம் தேதி தவெக​வில் இருந்து விலகி திமுக​வில் இணைந்​தார். இவருடன் 10-க்​கும் மேற்​பட்​டோர் தவெக உறுப்​பினர் படிவம், அடை​யாள அட்டை உள்​ளிட்​ட​வற்றை கிழித்​தும், படிவங்​களை எரித்​தும் திமுக​வில் தங்​களை இணைத்​துக் கொண்​டனர்.

இதையடுத்து சமூக வலை​தளங்​களில் சமீர் தவெக பற்றி அவதூறு கருத்​துகளை வெளி​யிட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதனால் சமீருக்​கும் தவெக நிர்​வாகி​களுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​டது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் சமீர் மீண்​டும் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டார். இதனால் ஆத்​திரமடைந்த தவெக நிர்​வாகி​கள் சிலர் சமீர் வீட்​டின் அருகே சென்று தகராறு செய்​தனர். இதில் இரு தரப்​பினரும் மாறி மாறி தாக்​கிக் கொண்டு சாலை​யில் படுத்து உருண்​டனர்.

இதைக் கண்ட சமீர் வீட்​டின் உரிமை​யாளர் ரமேஷ் (51) சண்​டையைத் தடுக்க முயன்​ற​போது அவரும் தாக்​கப்​பட்​டார். இதில் மூக்கு உடைந்து ரத்​தம் வடிந்​தது. உடனே அக்​கம் பக்​கத்​தினர் வளசர​வாக்​கம் போலீ​ஸாருக்கு இது தொடர்​பாக தகவல் தெரி​வித்​தனர். சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்த போலீ​ஸார் இரு தரப்​பினரை​யும் காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT