ஆர்.பி.உதயகுமார் | கோப்புப் படம். 
தமிழகம்

முதல்வர் குறித்து அவதூறு: தூத்துக்குடி எஸ்பி-யிடம் ஆர்.பி.உதயகுமார் மீது தவெக புகார்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தமிழக முதல்​வர் குறித்து அவதூறாக பேசி​ய​தாக, அதி​முக முன்​னாள் அமைச்​சர் உதயகு​மாருக்கு எதி​ராக தூத்​துக்​குடி எஸ்​பி அலு​வல​கத்​தில் தவெக​நேற்று புகார் மனு அளித்​தது.

தூத்​துக்​குடி​யில் கடந்த 8-ம் தேதி மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், பேரவை மாநில செய​லா​ள​ரும், முன்​னாள் அமைச்​சரு​மான ஆர்​.பி.உதயகு​மார் பேசியது: விசு​வாசம் என்​றால் என்ன தெரி​யு​மா, கொடி பறக்கும்​போது கைதட்​டு​வது அல்ல. அந்​தக் கொடி பறப்​ப​தற்கு யார் இடையூறாக இருந்​தா​லும், அந்தக் கையை எடுத்​து​விட்டு கொடியை பறக்க விடு​வது​தான் விசு​வாசம்.

அதி​முகவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க,அழிக்க நினைக்​கிறான். அதி​முகவை யாரேனும் அழிக்க நினைத்​தால், அவர்களின் வம்​சமே நாச​மாக போகும். மேலும் காவிரி தண்​ணீரை பற்றி பேசி​னால், காவிரி​யா​வது தண்ணி​யா​வது, எங்க அண்ணி திரிஷாவைப் பற்றி யார் பேசி​யது என்று தவெக​வினர் கேட்​கிறார்​கள். இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலை​யில் உதயகு​மாருக்கு எதி​ராக தூத்​துக்​குடி புறநகர் மாவட்ட தவெக பொருளாளர் அருண்​கு​மார் எஸ்​பி அலு​வல​கத்​தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார், தமிழக முதல்​வர் குறித்து தரக்​குறை​வாக​வும், ஒரு​மை​யிலும் பேசி​யுள்​ளார். இது தவெக தொண்​டர்​கள் மத்​தி​யில் மிகுந்த அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவதூறு கருத்​துகளை​ அவர் தெரிவிக்​காத வகை​யில் சட்​ட நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT