தேநீர் தயாரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் ஜி.பாலமுருகன்.

 
தமிழகம்

டீக்கடையில் தேநீர் தயாரித்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்

செய்திப்பிரிவு

சென்னை: அம்​பத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் ஜி.​பால​முரு​கன், தொகுதி முழு​வதும் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கிறார்.

அவர் கையாண்டு வரும் எளிமை​யான மற்​றும் நூதன பிரச்​சார முறை​கள் அப்​பகுதி மக்​களிடையே பெரும் கவனத்தை ஈர்த்​துள்​ளன.

வேட்​புமனுத் தாக்​கலை முடித்த கையோடு களத்​தில் இறங்​கி​யுள்ள பால​முரு​கன், தின​மும் காலை நேரங்​களில் தொகு​தி​யிலுள்ள முக்​கியப் பூங்​காக்​களுக்​குச் சென்று நடைப்​ப​யிற்சி மேற்​கொள்​பவர்​களிடம் கலந்​துரை​யாடு​வதை வழக்​க​மாகக் கொண்​டுள்​ளார்.

          

நேற்று தாங்​கல் பூங்​கா, புதூர் மீன் சந்​தை, மாத​னாங்​குப்​பம் மற்​றும் கள்​ளிக்​குப்​பம் உள்​ளிட்ட பகு​தி​களில் அவர் வீடு வீடாகச் சென்று ‘விசில்’ சின்​னத்​திற்கு ஆதரவு திரட்​டி​னார்.

பிரச்​சா​ரத்​தின் ஒரு பகு​தி​யாகக் கள்​ளிக்​குப்​பம் பகு​தி​யில் சென்​ற​போது, அங்​கிருந்த ஒரு டீக்​கடைக்​குச் சென்ற வேட்​பாளர் பால​முரு​கன், யாரும் எதிர்​பா​ராத வித​மாகத்தானே முன்​வந்து டீ ஆற்​றத் தொடங்​கி​னார்.

கடை​யில் இருந்த வாடிக்​கை​யாளர்​களிடம் சிரித்த முகத்​துடன் பேச்சு கொடுத்​த​படியே, அவர்​களுக்கு டீ விநி​யோகம் செய்த அவரது செயல் அங்​கிருந்​தவர்​களை வியப்​பில் ஆழ்த்​தி​யது.

மக்​களோடு மக்​களாக கலந்​து, எளிமை​யான முறை​யில் அவர் மேற்​கொண்டு வரும் இந்த அணுகு​முறை, அம்​பத்​தூர் தேர்​தல் களத்​தில்​ பேசும்​ பொருளாகி​யுள்​ளது.

SCROLL FOR NEXT