ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுதாக்கல் செய்த தவெக வேட்பாளர் அன்னை வி.ஜி.சரவணன்.

 
தமிழகம்

​முழுமையாக நிரப்பாத வேட்புமனுவை தாக்கல் செய்த தவெக வேட்பாளர்

வாங்க மறுத்து திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி

செய்திப்பிரிவு

ஸ்ரீவை​குண்​டத்​தில் முழு​மை​யாக நிரப்​பாமல் தவெக வேட்​பாளர் தாக்​கல் செய்த வேட்​புமனுவை தேர்​தல் நடத்​தும் அதி​காரி வாங்க மறுத்து திருப்பி அனுப்​பிய சம்​பவம் நகைப்பை ஏற்​படுத்​தி​யது.

தூத்​துக்​குடி மாவட்​டம் ஸ்ரீவை​குண்​டம் தொகுதி தவெக வேட்​பாளர் அன்னை வி.ஜி.சர​வணன். இவர், நேற்று முன்​தினம் பிற்​பகல் 2.55 மணிக்கு மேல் ஸ்ரீவை​குண்​டம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​துக்கு வந்​து, தேர்​தல் நடத்​தும் அதி​காரி செந்​தில்​வேல் முரு​க​னிடம் தனது வேட்​புமனுவை வழங்​கி​னார். அதை தேர்​தல் நடத்​தும் அதி​காரி மற்​றும் அலு​வலர்​கள் பார்​வை​யிட்​டனர்.

          

அப்​போது, மொத்​தம் 5 பக்​கங்​கள் கொண்ட வேட்​புமனு​வில் 4 பக்​கங்​கள் முழு​மை​யாக நிரப்​பப்​ப​டா​மல் இருப்​பது தெரிய​வந்​தது. வேட்​புமனு​வில் அப்​பகு​தி​யில் வசிப்​பவர்​களின் வழிமொழிதல், முன்​மொழிதல் மற்​றும் அவர்​களது முழு விவரங்​கள் இணைக்​கப்பட வேண்​டும். அவை​யும் இணைக்​கப்​பட​வில்​லை. மேலும், வேட்பு மனு​வில் வேட்​பாளரின் கையெழுத்து கூட இல்​லாதது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, தேர்​தல் நடத்​தும் அதி​காரி வேட்​புமனுவை சரவணனிடமே திருப்பி வழங்​கி​னார். ‘வேட்​புமனு மாலை 3 மணி வரை மட்​டுமே பெறப்​படும். மனுவை பெறு​வதற்கு இன்​னும் 2 நிமிடங்​களே உள்​ள​தால் அதற்​குள் பூர்த்தி செய்து வழங்க வேண்​டும். இல்​லை​யென்​றால் திங்​கட்​கிழமை (இன்​று) வந்து மனு​தாக்​கல் செய்​யுங்​கள்’ என தேர்​தல் அதி​காரி தெரி​வித்​தார்.

இதனால் தவெக வேட்​பாளர் வி.ஜி.சர​வணன் மற்​றும் நிர்​வாகி​கள் திரும்​பிச் சென்​றனர். உரிய ஆவணங்​களை இணைத்து திங்​கட்​கிழமை வேட்​புமனுத்​தாக்​கல் செய்​வோம் என அவர்​கள் கூறினர்.

நேரம் தெரி​யாத​தால் குழப்​பம்: தவெக வேட்​பாளரின் வேட்​புமனுவை பூர்த்தி செய்​யும் பணி ஸ்ரீவை​குண்​டத்​தில் நடந்​துள்​ளது. அப்​போது அக்​கட்​சியை சேர்ந்த ஒரு​வர் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்​கல் செய்​ய​லாம் எனத் தெரி​வித்​துள்​ளார். இதனால் மெது​வாக பூர்த்தி செய்து கொண்​டிருந்​துள்​ளனர். பின்​னர் மாலை 3 மணிக்​குள் வேட்​புமனு தாக்​கல் செய்ய வேண்​டும் என்று அவர்​களுக்கு தெரிய​வரவே அரைகுறை​யாக பூர்த்தி செய்​யப்​பட்ட வேட்​புமனுவுடன் அவசர அவசர​மாக வந்து அவர்​கள் தாக்​கல் செய்​தது தெரிய​வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT