நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி: நயினார் நாகேந்திரன் பதவிக்கு சிக்கல்?

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக படு​தோல்​வியைச் சந்​தித்​துள்ள நிலை​யில், பாஜக மாநிலத் தலை​வ​ரான நயி​னார் நாகேந்​திரனின் பதவிக்கு சிக்​கல் ஏற்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் களம் கண்ட பாஜக, பெரும் பின்​னடைவைச் சந்​தித்​துள்​ளது.

இந்​தத் தேர்​தலில் 27 தொகு​தி​களில் பாஜக போட்​டி​யிட்​டது. மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் மாநிலத் தலை​வர்​கள் தமிழிசை சவுந்​தர​ராஜன், எல்​.​முரு​கன் மற்​றும் தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனி​வாசன் போன்ற நட்​சத்​திர வேட்பாளர்​கள் களமிறக்​கப்​பட்​டனர்.

அதே​நேரம், முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை இத்​தேர்​தலில் போட்​டி​யி​டா​மல் பிரச்​சா​ரப் பணி​களில் கவனம் செலுத்​தி​னார். பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மற்​றும் ஜே.பி.நட்டா உள்​ளிட்ட தேசி​யத் தலை​வர்​கள், பல்​வேறு மாநில முதல்​வர்​கள் தமிழகத்​தில் முகாமிட்டு தீவிரப் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டனர்.

இருப்​பினும், போட்​டி​யிட்ட 27 இடங்​களில் ஒரேயொரு இடத்​தில் மட்​டுமே பாஜக வெற்றி பெற்​றுள்​ளது. 26 தொகு​தி​களில் அக்​கட்சி படு​தோல்​வியைத் தழு​வி​யிருப்​பது டெல்லி மேலிடத்தை கடும் அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. குறைந்​தது 10 தொகு​தி​களிலா​வது வெற்றி கிட்​டும் என நம்​பி​யிருந்த பாஜக தலை​மைக்​கு, இந்த முடிவு பெரும் ஏமாற்​றத்​தைத் தந்​துள்​ள​தால், தோல்விக்​கான காரணங்​களை ஆராய ‘உண்மை கண்​டறி​யும் குழு’ ஒன்றை அமைக்க மேலிடம் உத்​தர​விட்​டுள்​ளது.

தேசிய அளவி​லான முக்​கிய நிர்​வாகி​கள் மற்​றும் தமிழக பாஜக​வின் மூத்த நிர்​வாகி​கள் இந்​தக் குழு​வில் இடம்​பெறவுள்​ளனர். இக்​குழு அளிக்​கும் அறிக்​கை​யின் அடிப்​படை​யில், மாநிலத் தலை​மைப் பொறுப்​பில் மாற்​றம் இருக்​கும் என கூறப்​படு​கிறது. கடந்த நாடாளு​மன்​றத் தேர்​தலில் அண்​ணா​மலை​யின் தலை​மை​யில் பாஜக 24 இடங்​களில் களம் கண்​ட​போது, ஓரிடத்​தில்​கூட வெற்​றி​பெற​வில்லை என்​றாலும், வாக்கு சதவீதம் 11.24 ஆக உயர்ந்​தது. 12 தொகு​தி​களில் பாஜக இரண்​டாம் இடத்​தைப் பிடித்து அதி​முகவையே பின்​னுக்​குத் தள்​ளியது.

ஆனால், அண்​ணா​மலைக்கு மாற்​றாக நயி​னார் நாகேந்​திரன் மாநிலத் தலை​வ​ராகப் பொறுப்​பேற்ற பிறகு, கட்​சி​யின் அதிரடி செயல்​பாடு​கள் குறைந்​து, மந்​தநிலை ஏற்​பட்​டதே தேர்​தல் தோல்விக்கு முக்​கியக் காரணம் என கட்சி நிர்​வாகி​கள் கருதுகின்​றனர்.

டெல்லி மேலிடம் கவனிக்கும்: இதுகுறித்​துப் பேசிய பாஜக மூத்த நிர்​வாகி ஒரு​வர், "அண்​ணா​மலை தலை​மை​யில் இருந்த அந்த எழுச்​சி, இப்​போது காணா​மல் போய்​விட்​டது. கட்​சி​யின் வாக்கு வங்கி பெரு​மளவு சரிந்​துள்​ளது. தற்​போது தமிழகத்​தில் அமைந்​துள்ள தவெக அரசின் செயல்​பாடு​களை அடுத்த 6 மாதங்​களுக்கு டெல்லி மேலிடம் உன்​னிப்​பாகக் கவனிக்​கும்.

அதன் பிறகே புதிய மாநிலத் தலை​வர் குறித்த அறி​விப்பு வெளி​யாகும். பெரும்​பாலான நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் அண்​ணா​மலை மீண்​டும் தலைமை ஏற்க வேண்​டும் என விரும்​பு​கின்​றனர். எது​வாக இருந்​தா​லும்​ டெல்​லி தலை​மையே இறுதி முடிவு எடு​க்​கும்​" என்​றார்​.

SCROLL FOR NEXT