வைகோ | கோப்புப் படம்

 
தமிழகம்

“சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்துதான் திமுகவுடன் 9 ஆண்டுகள் பயணித்தோம்” - வைகோ வேதனை

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை: சுயமரி​யாதை​யையும் தன்​மானத்​தை​யும் இழந்துதான் திமுக கூட்​ட​ணி​யில் 9 ஆண்​டு​கள் பயணித்​தோம் என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கருத்து தெரி​வித்​துள்​ளார்.

விருதுநகர் மாவட்​டம் அருப்​புக்​கோட்​டை​யில் மதி​முக நிர்​வாகி இல்ல திருமண விழா​வில் பங்​கேற்று நேற்று அவர் பேசி​ய​தாவது: தமிழத்​தின் தற்​போதைய முதல்​வர் விஜய் என் வீட்​டுக்கு வரு​வார் என்று நான் கனவிலும் எதிர்​பார்க்​க​வில்​லை. பண ஆசை என்​பது ஒரு சதவீதம்​கூட இல்​லாதவன் நான். பொது​வாழ்க்​கை​யில் நானும் என் மகன் துரை வைகோ​வும் லட்​சக்​கணக்​கான கோடிகள் சம்​பா​தித்து விட்​ட​தாக​வும், அண்ணா சாலை​யில் அடுக்​கடுக்​கான மாளி​கைகளை என் மகன் கட்டி வைத்​திருப்​ப​தாக​வும் ஒரு​வர் வீண் பழி சுமத்தி வரு​கிறார்.

மேலும் முதல்​வர் விஜய்யை பார்த்து 50 கோடி ரூபாய் நான் வாங்​கி​விட்​ட​தாக​வும், 6, 7 மாத கால​மாக என் மீது அபாண்​ட​மான பழி​களை​யும் சுமத்தி வரு​கிறார். அவரை இப்​படிப் பேச வைப்​பது யார்? 32 ஆண்டு கால அரசி​யல் வாழ்​வில் ஐந்​தரை ஆண்​டு​கள் சிறை​யில் இருந்​துள்​ளேன், என்​னால் யூகிக்க முடி​யா​தா? யார் இதைத் தூண்டி விட்​டது என்​று.

முல்லை பெரி​யாறு அணை இல்​லை​யேல் மதுரை மாநகருக்கு குடிக்​கத் தண்​ணீர் கிடைக்​காது. 85 லட்​சம் ஏக்​கர் பஞ்​சப் பிரதேச​மாகும். அப்​படிப்​பட்ட முல்லை பெரி​யாறை காக்க 11 ஆண்​டு​கள் போராடிய​வன். நான் இருக்​கும் இடத்​துக்கு விசு​வாச​மாக இருந்​திருக்​கிறேன். அவர்​களை தூக்​கிப் பிடித்​திருக்​கிறேன்.

ஆனால், எங்​களை​விட வலுகுறைந்த கட்​சிகளுக்கு அதிக இடங்​கள், கிளை​கள்​கூட இல்​லாத கட்​சிக்கு 8 இடங்​கள், காணா​மல்​போகும் நிலை​யில் இருந்த கட்​சிக்கு 10 இடங்​களும் மாநிலங்​களவை பதவி​யும் அளித்​தார்​கள். எங்​களுக்கு மாநிலங்​களவை இடமும் கிடைக்​க​வில்​லை.

வேறு வழி​யில்​லாமல்... அனைத்​துக் கட்​சிகளும் அவர​வர் சின்​னத்​தில் நின்​ற​போது எங்​களை மட்​டும் அவர்​களின் சின்​னத்​தில் நிற்க சொன்​னார்​கள். வேறு வழி​யில்​லாமல் அவர்​களின் சின்​னத்​தில் நின்​றோம். எங்​கள் சுயமரி​யாதை​யையும் தன்​மானத்​தை​யும் இழந்​து​தான் 9 ஆண்​டு​கள் பயணித்​தோம். இந்த 9 ஆண்​டு​களில் திமுகவை ஒரு சொல் தவறாக சொன்​னது உண்​டா? உங்​களோடு இருந்த கட்​சிகள் உங்​களை விமர்​சித்​தன, அது உங்​களுக்​குத் தவறாகப்​பட​வில்​லை.

பாஜக​வுடன் கூட்​டணி வைத்து அதி​முகவை அமைச்​சர​வை​யில் அமர்த்த முடிவு செய்த நீங்​கள், எங்​களிடம் என்ன எதிர்​பார்க்க முடி​யும். இப்​படிப்​பட்ட விபரீத முடிவுக்கு வரு​வீர்​கள் என நாங்​கள் எதிர்​பார்க்​க​வில்​லை. இவ்​வாறு மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT