சென்னை: திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட இந்த நாளில், திராவிட மாடல் 2.O-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: ”மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலை நிமிர்ந்த நாள்”
1967ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன்!
திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, #DravidianModel 2.O-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவோடு!” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.