தமிழகம்

பயணிகள் நெரிசலை சமாளிக்க ஐசிஎஃப்-ல் தலா 15 பெட்டிகளை கொண்ட 2 மின்சார ரயில்கள் மேற்கு ரயில்வேக்கு அனுப்பி வைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐசிஎஃப் ஆலை​யில் முதன்​முறை​யாக, தலா 15 பெட்​டிகளை கொண்ட 2 மின்​சார ரயில்​கள் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​கள் மேற்கு ரயில்வே மண்​டலத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

மும்​பை, சென்​னை, கொல்​கத்தா மற்​றும் டெல்​லி​யில் இயக்​கப்​படும் 12 பெட்டி மின்​சார ரயில்​களில் தினசரி பல லட்​சம் பேர் பயணம் செய்​கின்​றனர். இருப்​பினும், காலை, மாலை வேளை​யில் ‘பீக் ஹவர்​ஸ்’ எனப்​படும் நெரிசல் மிகுந்த நேரங்​களில் பயணி​கள் கூட்​டம் அலைமோதுகிறது.

          

எனவே, அதிக பயணி​கள் செல்​லும் வகை​யில், 15 பெட்டி கொண்ட மின்​சார ரயில் தயாரிக்க ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்​சாலைக்கு ரயில்வே வாரி​யம் உத்​தர​விட்​டது. தற்​போது தலா 15 பெட்​டிகளை கொண்ட 2 மின்​சார ரயில்​கள் தயாரித்து முடிக்​கப்​பட்​டுள்​ளன. மீதம் 4 ரயில்​கள் தயாரிக்​கும் பணி முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

7,555 பேர் பயணிக்கலாம்

இதுகுறித்​து, சென்னை ஐசிஎஃப் அதி​காரி​கள் கூறிய​தாவது: மும்​பை, சென்​னை​யில் தான் அதிக அளவில் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. தினசரி பல லட்​சக்​கணக்​கான மக்​கள் பயணம் செய்​கின்​றனர்.

காலை, மாலை வேளை​யில் நெரிசல் மிகுந்த நேரங்​களில், கூடு​தல் மின்​சார ரயில்​கள் இயக்க அறி​வுறுத்​தப்​படு​கிறது. இதற்​கிடை​யில், தலா 15 பெட்​டிகளை கொண்ட 6 மின்​சார ரயில்​களை தயாரிக்க ரயில்வே வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

தலா 15 பெட்​டிகள் கொண்ட 2 மின்​சார ரயில்​கள் தயாரிப்பு பணி முடிந்​து, மேற்கு ரயில்​வேக்கு அனுப்​பிவைக்கப்​பட்​டுள்​ளன. கடந்த மாதத்​தில் முதல் 15 பெட்​டிகளை கொண்ட மின்​சார ரயிலை​யும், அண்​மை​யில், 2-வது ரயிலை​யும் தயாரித்து வழங்​கினோம்.

இந்த ரயில்​கள் மும்​பைக்கு அனுப்​பப்​படும். ஒரு ரயி​லில் ஒரே நேரத்​தில் 7,555 நபர்​கள் பயணிக்க முடி​யும். இதுத​விர, தலா 12 பெட்​டிகள் கொண்ட இரண்டு மின்​சார ரயில்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன.

இந்த ரயில் தானி​யங்கி கதவு கொண்​டது. மெட்ரோ ரயில் பெட்​டிகள் மாதிரி​யும், கதவு​கள் பெரிய​தாக​வும் இருக்​கும். இந்த ரயில் தயாரிக்​கும் பணி முழு​வீச்​சில் நடை​பெறுகிறது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT