கோப்புப் படம்

 
தமிழகம்

பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழ்நாடு ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ரயில் பயணி​களின் கோரிக்​கைகள் குறித்​து, ரயில்​வேக்கு கொண்டு செல்​லும் வகை​யில், 40-க்​கும் மேற்​பட்ட சங்​கங்​கள் இணைந்​து, தமிழ்​நாடு ரயில் பயனாளர்​கள் கூட்​டமைப்பு தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இதன் தலை​வ​ராக சுப்​பிரமணி​யனும்​, பொதுச்​செய​லா​ள​ராக நஜிப் இசக் கனி, பொருளா​ராக னி​வாசனும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இது குறித்​து, தமிழ்​நாடு ரயில் பயனாளர்​கள் கூட்​டமைப்​பின் தலை​வர் சுப்​பிரமணி​யன் கூறிய​தாவது: தமிழகத்​தில் ரயில் பயணி​களுக்கு பல்​வேறு கோரிக்​கைகள் நீண்ட நாட்​களாக இருக்​கின்​றன.

முதலில் பயணி​கள் தேவைக்கு ஏற்ப, ரயில்​கள் இல்​லாமல் இருக்​கின்​றன. ரயில்​களை அதி​கரிக்க மத்​திய ரயில்வே துறை​யிட​மும், இங்​குள்ள ரயில் பாதைகளுக்​கான நிலம் கையகப்​படுத்​தித் தர தமிழக அரசிட​மும் வலி​யுறுத்​து​வோம்.

மேலும், பயணி​கள் அதி​க​மாக உள்ள இடங்​களில், ரயில்​களுக்கு கூடு​தல் நிறுத்த வசதி, குறுகிய துார ரயில்​களின் சேவை அதி​கரிப்​பது, சில வழித்​தடங்​களில் ரயில்​களின் சேவை நீட்​டிப்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகள் குறித்​து, ரயில்​வே​யின் கவனத்​துக்கு கொண்டு செல்​வோம்.

அது​போல, ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்​கான அடிப்​படை வசதி​களை மேம்​படுத்​து​வது, பாது​காப்பு கட்​டமைப்​பு​களை உரு​வாக்​கு​வது போன்ற ரயில் பயணி​களின் கோரிக்​கைகளை முன்​வைத்து நாங்​கள் மாநில அளவில் செயல்​படு​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT