முதல்வர் ஸ்டாலின்

 
தமிழகம்

மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: இலங்கை கடற்​படை​யின​ரால் மயி​லாடு​துறை மாவட்ட மீனவர்​கள் 9 பேர் நேற்று கைது செய்​யப்​பட்​டனர்.

மயி​லாடு​துறை மாவட்​டம் தரங்​கம்​பாடி வட்​டம் பெரு​மாள்​பேட்டை கிராமத்​தைச் சேர்ந்த மஞ்​சுளா என்​பவருக்கு சொந்​த​மான படகில் அவரது கணவர் பொண்ணு குட்​டி(45), குமார்​(45), ரீகன்​(20), புதுப்​பேட்டை அன்​பு​ராஜ்(30), பழை​யார் கவுசிகன்​(26) ஆகியோர் நாகை மாவட்​டம் கோடியக்​கரை​யில் இருந்து நேற்று முன்​தினம் மீன்​பிடிக்க கடலுக்​குச் சென்​றனர்.

இதே​போல, வானகிரியைச் சேர்ந்த முபின்​தாஸ் என்​பவருக்​குச் சொந்​த​மான படகில் அவரது தந்தை தங்​க​ராசு(45), மதன்​(21), ராமலிங்​கம்​(30), அக்​கரைப்​பேட்டை செல்​வ​ராஜ்(48) ஆகியோர் கோடியக்​கரை மீன்​பிடித் துறை​முகத்​தில் இருந்து நேற்று முன்​தினம் கடலுக்கு மீன்​பிடிக்க சென்​றுள்​ளனர்.

இந்த 2 படகு​களும் அனலை தீவு அருகே நேற்று மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்​த​தாகக் கூறி 9 மீனவர்​களை​யும் கைது செய்​தனர். மேலும், 2 படகு​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. பின்​னர், கைது செய்​யப்​பட்ட மீனவர்​களை இலங்கை காரை நகர் துறை​முகத்​துக்கு கொண்டு சென்​றனர். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூதகர நடவடிக்​கைகள்.. தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், மத்​திய அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கருக்கு எழு​தி​உள்ள கடிதம்: புத்​தாண்​டின் தொடக்​கத்​திலேயே மீனவர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளது, தமிழக மீனவர்​கள் தொடர்ந்து எதிர்​கொள்​ளும் அவல நிலையை மீண்​டும் எடுத்​துக்​காட்​டி​யுள்​ளது. தமிழகத்​தைச் சேர்ந்த 73 மீனவர்​கள் இலங்கை சிறை​களில் உள்​ளனர். மேலும், 251 மீன்​பிடிப் படகு​கள் இலங்கை வசம் உள்​ளன.

தொடர் கைது சம்​பவங்​கள், தமிழக மீனவ சமு​தாய மக்​களிடையே பதற்​றத்​தை​யும், வேதனையை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது. இலங்கை சிறை​யில் உள்ள மீனவர்​கள், படகு​களை விடுவிக்​க​வும், இனி​யும் கைது நடவடிக்​கைகள் தொட​ராமல் இருக்​க​வும் வெளி​யுறவுத் துறை மூலம் தூதரக நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு கடிதத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT